Thursday, June 29, 2017

•பொதுபலசேனாவும் இலங்கைஅரசும் சேர்ந்து நடத்தும் நாடகம்!

•பொதுபலசேனாவும் இலங்கைஅரசும் சேர்ந்து நடத்தும் நாடகம்!

அவங்களே பொலிஸ் குழு அமைத்து தேடுவாங்க
அவங்களே மறைத்து ஒளித்து வைத்திருப்பாங்க
அவங்களே பின்னர் கைதும் செய்வாங்க
அவங்களே உடன் பிணையில் விடுதலை செய்வாங்க
என்னடா நடக்குது அங்கே என்று கேட்டால்
இனவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக
சிரிக்காமல் சொல்கிறார்கள்.
வள்ளுவர் சிலையின் கீழ் ஈழம் என்ற வார்த்தையே இருக்ககூடாது என்று விரைந்து நடவடிக்கை எடுத்தவர்கள்
பொதுபலசேனாவின் இன மத வாத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கள்ளத் தோணியில் இலங்கைக்கு வந்தவர்கள் என்று பகிரங்கமாக இனவாதத்தைக் கக்கிறார் ஞானதேரர்.
இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைசர் மனோகணேசனின் அலுவலகம் சென்று மிரட்டுகின்றார் இந்த ஞானதேரர்.
ஒவ்வொரு நாளும் ஒரு கடை என்ற ரீதியில் திட்டமிட்டு முஸ்லிம் கடைகள் எரிக்கப்படுகின்றன.
திட்டமிட்டு முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் சேதமாக்கப்படுகின்றன. ஆனால் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அரசு மௌனமாக இருக்கிறது.
மீண்டும் நாட்டில் ஒரு இனகலவரத்தை எற்படுத்த அரசு முனைகிறது. அதன்மூலம் தமிழ்மக்களுக்கு தீர்வு எதுவும் வழங்காமல் இழுத்தடிக்க அது முனைகிறது.

No comments:

Post a Comment