Sunday, June 18, 2017

நியாயவான்களே! இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள்?

•நியாயவான்களே!
இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள்?
அண்மையில் மூதூரில் 3 பாடசாலை மாணவிகள் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதும் மொத்த முஸ்லிம் இனத்தின் மீதும் குற்றம் சுமத்தி சிலர் எழுதினார்கள்.
பாடசாலை மாணவிகளுக்கு நடந்த சம்பவத்தை கண்டிப்பதாகவும் அந்த செயலை செய்தவர்களை கைது செய்து தண்டனை வழங்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் முஸ்லிம் மக்கள் தெரிவித்த பின்னரும்கூட அவர்கள் மீது அவதூறு வீசப்பட்டு வருகிறது.
முஸ்லிம் மக்கள் அனைவரும் போதைப் பொருள் உண்பவர்கள் என்றும் அவர்கள் பலதார மணம் மட்டுமன்றி சிறுவயது பெண்களையும் திருமணம் செய்யும் கலாச்சாரம் உடையவர்கள் என்றும் எழுதினார்கள்.
லண்டனில் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் சில தமிழர்கள் தங்கள் முகநூலில் இதை தொடர்ந்து எழுதினார்கள்.
இலங்கையில் வித்யா மற்றும் சேயா போன்ற மாணவிகளுக்கு இந்த துன்பம் நடந்தபோது அது பற்றி கண்டுகொள்ளாமல் இருந்த இவர்கள் மூதூரில் நடந்தபோது மட்டும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக துவேசத்தை கக்கிறார்கள்.
லண்டனில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஈழத் தமிழர் சிந்துஜான் யோகநாதன் என்பவரை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர் தனக்கு சொந்தமான அவுடி காரில் வைத்து இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆறு பெண்கள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள யோகநாதன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நீதிபதி முன்பு ஒத்துக்கொண்டுள்ளார். மிக விரைவில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படவுள்ளது
இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் லிவர்பூல் என்னும் இடத்தில் பல பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமைக்காக தமிழ் சகோதரர்கள் இருவருக்கு பத்து வருட தண்டனை விதிக்கப்பட்டது.
இங்கு நாம் கேட்க விரும்புவது என்னவெனில், தமிழ் மக்கள் எல்லோரும் காம வெறியர்கள். அவர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று யாராவது வெள்ளைக்காரர் எழுதினால் அதற்கு என்ன பதில் இவர்கள் கூறுவார்கள்?

No comments:

Post a Comment