Thursday, June 29, 2017

தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!

தோழர் சுந்தரம் நினைவுகள் நீடூழி வாழ்க!
தோழர் சுந்தரம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத் தமிழர்களை உறுதியாக ஆதரித்தவர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை எப்போதும் ஆதரித்து வந்தவர்.
ஈழத் தமிழர்களுக்கு அதரவாக இந்திய அரசுக்கு எதிராக வெடி குண்டு வீசி எச்சரித்தவர்.
நெருக்கடியான காலகட்டத்தில் ஈழத் தமிழருக்கான தமிழக மக்களின் அதரவை வெளிப்படுத்தியவர்.
அத்தகைய தோழர் சுந்தரத்தின் மறைவு ஈழத் தமிழர்களுக்கு பேரிழப்பாகும்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை உச்சரிக்க ஈழ ஆதரவுத் தலைவர்களான வைகோ, ராமதாஸ், சீமான், திருமாவளவன் போன்றவர்கள் தவறலாம் அல்லது தவிர்க்கலாம்.
அதுபோல், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்த தோழர் சுந்தரத்தின் பெயரை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பொறிப்பதற்கு நெடுமாறன் அய்யா தயங்கலாம்; அல்லது தவிர்க்கலாம்.
ஆனால் தமக்காக குரல் கொடுத்த தோழர் சுந்தரத்தை ஈழத் தமிழ் மக்கள் என்றும் நன்றியுடன் தங்கள் மனங்களில் நினைவு கூருவர்.
ஈழத் தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் தோழர் சுந்தரத்தின் பெயரும் நிச்சயம் இடம்பெறும்.
அவருக்கு ஈழத் தமிழர்கள் சார்பாக எனது அஞ்சலிகளையும் செவ் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மறைந்த தோழர் சுந்தரம் குறித்து நான் எழுதிய அஞ்சலிக் குறிப்பை கீழ்வரும் இணைப்பில் வாசிக்கலாம். இக் குறிப்பு இம்மாத “விடுதலை அறம்” இதழில் வெளிவந்துள்ளது.

No comments:

Post a Comment