Thursday, June 29, 2017

•மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ் இளைஞனுக்காக மேன்முறையீடு உதவி செய்த மாகாணசபை உறுப்பினர்;

•மரணதண்டனை விதிக்கப்பட்ட தமிழ் இளைஞனுக்காக
மேன்முறையீடு உதவி செய்த மாகாணசபை உறுப்பினர்;
வெல்லாவெளியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் கேதீஸ்வரன் என்ற தமிழ் இளைஞனுக்கு மொனராகலை நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
ஏழைக் குடும்பத்தை சேர்;நத அவ் இளைஞனுக்கு மேன்முறையீடு செய்வதற்கு வசதியற்ற நிலையில் இருந்தார்.
யாராவது தமிழ் இன உணர்வுள்ளவர்கள் உதவி செய்யுமாறு எனது முகநூல் பதிவில் கோரியிருந்தேன்.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜனா கருணாகரன் (டெலோ அமைப்பை சேர்ந்தவர்) இவ் இளைஞனுக்குரிய மேன்முறையீட்டை மொனராகலை நீதிமன்றதத்தில் இன்று செய்துள்ளதாக அறிய வருகிறது.
மாகாணசபை உறுப்பினர் ஜனா கருணாகரனின் உதவி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது.
அவருக்கு எமது பாராட்டுகள்.

No comments:

Post a Comment