Wednesday, February 28, 2018

ஆந்திராவுக்கு 1269 கோடி ரூபா தமிழ்நாட்டிற்கு ஆன்மீக அரசியல்

ஆந்திராவுக்கு 1269 கோடி ரூபா
தமிழ்நாட்டிற்கு ஆன்மீக அரசியல்
இதுதான் மோடி அரசின் நியாயமா?
தமிழா! தமிழா!
உன் நெற்றியில் பட்டைநாமம் பூசப்படுவது தெரியவில்லையா?
ஆண்டாளுக்காக போராடுவதாக கூறும் எச்ச ராசா கோஸ்டியினர்
தமிழ்நாட்டிற்காக ஏன் போராடுவதில்லை?
ஆந்திரா இந்தியாவில் இல்லையா? என்று ஒரேயொரு கேள்வியைத்தான் அந்திரமுதல்வர் கேட்டார்.
உடனே பதறியடித்தக்கொண்டு மோடி அரசு அவர் கேட்ட 1269 கோடி ரூபாவை தூக்கி கொடுத்தள்ளது.
தமிழ்நாட்டிற்கும் முதல்வர் மட்டுமல்ல துணை முதல்வரும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருவரால்கூட ஏன் இப்படியொரு கேள்வியைக் கேட்க முடியவில்லை?
ஆந்திர முதல்வர் பாஜக கூட்டணியில் இருக்கிறார். இருந்தும் அவரால் தனக்கு வேண்டியதை மிரட்டி கேட்டப்பெற முடிகிறது.
ஆனால் தமிழக முதல்வரால் மிரட்டிக்கூட அல்லாவிடினும் கெஞ்சிக்கூட தேவையான நிதியைப் பெற முடியவில்லையே.
புயல் நிவாரண நிதி பெற முடியவில்லை. காவிரி தண்ணீர் பெற முடியவில்லை. எதையுமே தமிழகத்திற்கு பெற முடியவில்லை.
காவிரி தண்ணீரில் தமிழனுக்கும் பங்கு இருக்கு சொல்ல தைரியம் அற்ற ரஜனி சிஸ்டம் சரியில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
திண்டுக்கல்லில் புற்றுநோயால் இறந்த தாயை புதைக்க பணம் இன்றி பிள்ளைகள் பிச்சை எடுக்கிறார்கள்.
இவைகள் பற்றி அக்கறையற்ற எச்ச.ராசா கும்பல் ஆண்டாளுக்காக போராட்டம் நடத்துகிறது.
இன்னும் எத்தனை நாளைக்கு இதனை அனுமதிக்கொண்டிருப்பது?

No comments:

Post a Comment