Wednesday, February 28, 2018

சுமந்திரன், சம்பந்தர் உயிராபத்து நீங்கிவிட்டதா?

•சுமந்திரன், சம்பந்தர் உயிராபத்து நீங்கிவிட்டதா?
வன்னியில் நடந்த கூட்டங்களின்போது சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்கு அதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டன.
கூட்டத்திற்கு வந்த மக்களைக்கூட வாசலில் வைத்து பொலிசார் சோதனை இட்டனர்.
பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளைக்கூட இந்த பொலிசார் கடும் சோதனை செய்தனர்.
ஏன் இத்தனை பாதுகாப்பு? ஏன் சொந்தமக்களைக்கூட சோதனை செய்ய வேண்டும்? என்று சமூகவலைத்தள ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பினர்.
சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்கு உயிர் ஆபத்து இருக்கிறது என்றும் அதனால் இந்த பாதுகாப்பும் சோதனைகளும் அவசியம் என்று அவர்களுடைய செம்புகள் பதில் எழுதினார்கள்.
தற்போது கடைசியாக யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்குரிய பாதுகாப்புகள் பெருமளவு குறைக்கபட்டிருந்தது.
அதுமட்டுமன்றி வன்னியில் செய்ததுபோன்று கூட்டத்திற்கு வந்த மக்கள் சோதனை செய்யப்படவில்லை.
இங்கு எமது கேள்வி என்னவெனில், சுமந்திரன் மற்றும் சம்பந்தருக்கு இருந்த உயிராபத்து நீங்கிவிட்டதா? அல்லது,
வன்னிமக்கள் கொலைகாரர்கள், யாழ்ப்பாண மக்கள் கொலைகாரர்கள் இல்லை என்று சம்பந்தரும் சுமந்திரனும் கருதுகிறார்களா?
சம்பந்தர் மற்றும் சுமந்திரனுக்கு பாதுகாப்பு அவசியம் என்ற அவரது செம்புகள் இதற்கு பதில் தருவார்களா?

No comments:

Post a Comment