Wednesday, February 28, 2018

அவன் காட்டை திருடியவர்கள்

அவன் காட்டை திருடியவர்கள்
அவன் நிலத்தை திருடியவர்கள்
அவன் நிலத்தில் தேயிலை விளைவித்தவர்கள்
அவன் நிலத்தில் ரப்பர் மரங்களை நட்டவர்கள்
இவ்வாறு அவன் உடமை அனைத்தையும்
உரிமையோடு எடுத்துக்கொண்டவர்கள்
அவன் பசிக்கு அரிசியை எடுத்தபோது
அவனை திருடன் என்று அடித்துக் கொன்றனர்.
அப்பொழுதுகூட அவன் அப்பாவியாகவே நின்றான்
ஏனெனில் அவன் ஒரு ஆதிவாசி.
ஆதிவாசிகளை மட்டுமல்ல
ஆதிவாசிகளுக்காக குரல் கொடுப்பவர்களையும்
கொன்றுவிடும் மாநிலமே கேரளா!
குறிப்பு- கடந்த வருடம் ஆதிவாசி மக்களுக்காக குரல் கொடுத்த தமிழக பெண் சட்டத்தரணி அஜிதா கேரள பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

No comments:

Post a Comment