Wednesday, February 28, 2018

மயிலு!

மயிலு!
உன்னோட நடிச்ச பரட்டையும் சப்பாணியும்
தமிழ்நாட்டில கட்சி ஆரம்பிச்சிட்டாங்க.
நீயும் கட்சி ஆரம்பிச்சிருந்தா
உன்னையும் இன்னொரு “அம்மா” என்று
தூக்கி கொண்டாடியிருப்பாங்க-ஏனென்றால்
தமிழன், வந்தாரை வாழ வைத்து மட்டுமல்ல
ஆளவைத்தும் அழகு பார்ப்பவன்.
அந்தளவுக்கு இளிச்சவாயனாக இருக்கிறான்.
உன் மரண செய்தி கேட்டதும்
பிரதமர் முதல் ஜனாதிபதி வரை
எல்லோரும் பேரிழப்பு என்கிறாங்கள்.
ஒருவேளை நீ இந்திய மர்லின்மனறாவோ
என்று எண்ணத் தோன்றுகிறது.
நீ உச்சத்தில் இருந்தபோது
உளி எறிந்து கலைஞர் கருணாநிதியை
கொல்ல முயன்றதாக சட்டசபையில்
பெரும் அமளியுடன் ஒரு விவாதம் நடந்தது.
உளி எங்கே எறியப்பட்டது என்ற கேள்விக்கு
நள்ளிரவில் உன் வீட்டிற்கு வந்துசென்றபோதே
அது நடந்தது என்ற உண்மையை
கடைசிவரை கலைஞர் சொல்லவேயில்லை
நீ இறந்த அதே நாளில் விழுப்புரத்தில்
ஒரு தாயும் மகனும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அந்த தாயின் 11 வயது மகள்
கூட்டாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்டிருக்கிறாள்.
சாதி வெறியில் ஒரு குடும்பம் சிதைக்கப்பட்டிருப்பது குறித்து
ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கவலை இல்லை.
அவர்களுடைய கவலை எல்லாம் தங்கள் கனவுக்கன்னி
நீ மரணித்து விட்டாய் என்பது மட்டுமே!

No comments:

Post a Comment