Wednesday, February 28, 2018

இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?

•இந்த முட்டாள்தனத்தை என்னவென்று அழைப்பது?
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு கோயில் கருவறைக்குள் வெப்பத்தை உண்டாக்கும் ஹீட்டரை பொருத்தியுள்ளனர்.
குளிருக்காக ஹீட்டரை பொருத்தியதில் தவறு இல்லை. ஆனால் அதற்கு அவர்கள் சொன்ன காரணம்தான் அதிர்ச்சி தருகிறது.
குளிரில் சுவாமி விக்கிரகங்களுக்கு ஜலதோசம் பிடித்துவிடுமாம். அதனால்தான் ஹீட்டர் போட்டுள்ளார்களாம்.
கல்லு சாமி சிலைக்கு ஜலதோசம் பிடித்துவிடும் என்று ஹீட்டர் போடும் அதே மாநிலத்தில்தான் மருத்தவமனையில் ஒட்சிசன் சிலிண்டர் இன்மையால் பல குழந்தைகள் இறந்தனர்.
அதுமட்டுமல்ல அண்மையில் திண்டுக்கல் மருத்துவமனையில் புற்றுநோயால் இறந்த தாயை புதைக்க பணம் இன்மையால் 3 குழந்தைகள் சக நோயாளிகளிடம் பிச்சை எடுத்தார்கள்.
ஆனால் அதேவேளை ஒரு சாமியார் பல ஏக்கர் நிலத்தில் பெரிய சிவலிங்கம் அமைத்து அதற்கு பல்லாயிரம் லீட்டர் பாலை ஊற்றி நடிகையுடன் கட்டிப் பிடித்து ஆட்டம் போடுகிறார்.
ஒருபுறம் செவ்வாய்க்கு கோள் அனுப்பி ஆராய்ச்சி செய்கிறது இந்தியா. மறுபுறம் இந்த செவ்வாய் கோளின் வேலை பெண்களின் திருமணத்தை நிறுத்துவது என்று நம்பிக்கொண்டு தோஷம் நீக்க பெண்கள் அலைகிறார்கள்.
இந்த முட்டாள்தனங்களை அகற்ற வேண்டிய இந்தியஅரசே இதை முன்நின்று பரப்புவதுதான் இன்னும் வேதனையாக இருக்கிறது.
டிஜிட்டல் இந்தியா 2020ல் எப்படி வல்லரசாகப்போகிறது?
குறிப்பு- ஒரு நிர்வாண சாமியார் தன் ஆண் உறுப்பில் மணி ஒன்றை கட்டி தொங்கவிட்டுள்ளார். அதை இன்னொரு நிர்வாண சாமியார் ஆட்டி அடித்துக்கொண்டிருக்கிறார். இதை ஒரு பெண் பக்தியுடன் வணங்குகிறார். இந்த புகைப்படத்தை பிரசுரம் செய்தால் பேஸ்புக் நிர்வாகம் என்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டுகிறது. நான் என்ன செய்ய முடியும்?

No comments:

Post a Comment