Wednesday, February 28, 2018

முள்ளிவாய்க்காலில் எம் குழந்தைகளை

முள்ளிவாய்க்காலில் எம் குழந்தைகளை
காப்பாற்ற முடியாமற்போன எங்களால்
சிரியாவில் கொல்லப்படும் குழந்தைகளை
காப்பாற்றிவிடத்தான் முடியுமா?
நாம் யுத்தத்திற்கு எதிராக பேசிவிட்டால்
யுத்தம் நின்றுவிடப் போவதில்லை
நாம் படுகொலைகளுக்கு எதிராக
எழுந்து நின்றுவிடுவதால் மட்டும்
படுகொலைகள் நிறுத்தப்படப் போவதில்லை
குழந்தைகளும் பெண்களும் கொல்லப்படுவதை
தினமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைவிட
அதற்கு எதிராக குரலாவது கொடுப்போம்
ஏனெனில்
பார்த்துக்கொண்டிருந்தவர்கள் என்பதைவிட
நிறுத்த முயற்சி செய்தவர்கள் என்றாவது
வரலாற்றில் எங்கள் பெயர்கள் இருக்கட்டும்!

No comments:

Post a Comment