Wednesday, February 28, 2018

•70வது சுதந்திரதினம் (04.02.2018) இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?

•70வது சுதந்திரதினம் (04.02.2018)
இலங்கையில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது?
அரசியல்வாதிகள் பதவி பெறவும் அந்த பதவி மூலம் லஞ்சம் பெறவும் ஊழல் செய்யவுமே சுதந்திரம் இருக்கிறது.
சுதந்திரம் என்னும் பெயரில் வெள்ளைக்காரர்களுக்கு பதிலாக கொள்ளைக்காரர்கள் ஆட்சிக்கு வந்துள்ளார்கள்.
இதுவரை 40 ஆயிரம் தமிழ்மக்கள் , 60 ஆயிரம் சிங்கள இளைஞர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கையின் அபிவிருத்திக்கு புலிகள் தடையாக இருக்கின்றார்கள் என்றார்கள்.
புலிகள் இல்லை என்றால் இலங்கையில் பாலும் தேனாறும் ஓடும் என்றார்கள்.
இப்போது புலிகள் இல்லை. ஆனால் அவர்கள் கூறிய பாலும் தேனாறும் இன்னும் ஓடவில்லை.
யுத்தத்திற்கு கோடிக் கணக்கான ரூபாயை திரட்டி செலவு செய்த ஆட்சியாளர்களால் இப்போது மக்களுக்காக ஏன் பணம் திரட்ட முடியவில்லை?
நாடுமுழுவதும் மக்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் பிள்ளைகளுடன் தற்கொலை செய்கிறார்களே. அது குறித்து ஏன் இந்த ஆட்சியாளர்களால் அக்கறை கொள்ள முடியவில்லை?
புனிதபூமி என்று கூறும் அநுராதபுரத்திலே ஒரு சிங்கள சிறுவன் உடுக்க உடையின்றி நிர்வாணமாக குப்பையில் உணவு பொறுக்கிறானே. இது ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல அந்த புத்தருக்கே கேவலம் இல்லையா?
நாடுமுழுவதும் புத்தர் சிலை அமைக்க 100 கோடி ரூபாவை ஒதுக்கும் இந்த ஆட்சியாளர்களால் அந்த சிறுவனுக்கு ஏன் உணவு வழங்க பணம் ஒதுக்க முடியவில்லை?
ஒரு சிங்கள தாய் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் பெத்த மகளையே விபச்சாரம் செய்ய வைத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளாரே அது இந்த அரசுக்கு கேவலம் இல்லையா?
அனைத்து மக்களும் கஸ்டப்படுகின்றனர். ஆனால் அரசோ எம்.பி களுக்கு ஒரு லட்சம் ரூபா சம்பளம், 5 கோடி ரூபா சொகுசு வாகனம். 2 கோடி ரூபா லஞ்சம்; தருவது அசிங்கம் இல்லையா?
உலகில் சிறுவர் பாலியல் விபச்சாரத்தில் முதலிடம் என்ற பெருமையை(?) இலங்கை பெற்றுள்ளவேளையில் 70வது சுதந்திர தினம் கொண்டாடுவதில் என்ன பெருமை இருக்கிறது?

No comments:

Post a Comment