Wednesday, February 28, 2018

இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கும் லண்டன் வாழ் தமிழர்கள் சொன்ன செய்தி!

•இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கும்
லண்டன் வாழ் தமிழர்கள் சொன்ன செய்தி!
லண்டன் இலங்கை தூதரகம் முன்பு லண்டன் தமிழ் மக்கள் நடத்திய போராட்டம் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் ஒரு செய்தியை கூறியுள்ளது.
சம்பந்தரையும் சுமந்திரனையும் விலைக்கு வாங்கிவிட்டால் தமிழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டுவிடுவார்கள் என இலங்கை அரசு நினைத்தது.
இரண்டு நாட்களில் 40 ஆயிரம் மக்களை கொன்றால் அந்த மக்கள் போராட ஒருபோதும் துணிய மாட்டார்கள் என உலக நாடுகள் நினைத்தன.
ஆனால் தமிழன் எங்கு இருந்தாலும் தனது அடிமைத்தனத்திற்கு எதிராக போராடுவதை ஒருபோதும் கைவிட மாட்டான் என்பதை லண்டனில் நிரூபித்துள்ளான்.
இலங்கை சுதந்திரதினத்தை துக்கநாளாக முதன் முதலில் 1957ல் அறிவித்தது தமிழரசுக்கட்சியே.
அதன்படி திருகோணமலையில் கறுப்புக் கொடியேற்றிய நடராஜா என்ற தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆனால் இன்று அதே தமிழரசுக்கட்சியின் தலைவர் சம்பந்தர் அய்யா அதே திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினராக சிங்க கொடியை ஏற்றுகிறார்.
இது அந்த நடராஜா என்ற தமிழருக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
காணாமல்போனவர்களின் உறவுகள் 350 நாட்களாக வீதியில் உட்கார்ந்து போராட்டம் செய்கிறார்கள்.
அவர்கள் இன்று கறுப்பு உடை அணிந்து தமது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தாயகத்தில் மட்டுமல்ல லண்டன் பிரான்ஸ் மற்றும் பல நாடு:களில் வாழும் தமிழ் மக்கள் தமது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.
வழக்கத்தைவிட இம்முறை அதிகளவான தமிழ் மக்கள் இந்த போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளனர்.
போராட்டமானது போராட்ட இலக்கியம் பிறக்க வழி சமைக்கும். இம்முறை பறை இசையுடன் போராட்ட பாடலும் லண்டன் போராட்டத்தில் பிறந்துள்ளது.
இந்த மக்களின் எதிர்ப்பு போராட்டம் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு மாற்று உருவாகுவதைக் காட்டுகின்றனது.
வாழ்த்துவோம். வரவேற்போம்.

No comments:

Post a Comment