Wednesday, February 28, 2018

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்திவைக்க ஏற்பட்ட முக்கிய சாதனங்களில் ஒன்றாகும் - தோழர் லெனின்

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்திவைக்க ஏற்பட்ட முக்கிய சாதனங்களில் ஒன்றாகும் - தோழர் லெனின்
இலங்கையில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்று ஜே.வி.பி தலைவர் அநுர குமரா திசநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் ஒரு சிங்களவர் மட்டுமல்ல பௌத்த மதத்தையும் சேர்ந்தவர். இருந்தும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்று பேசியுள்ளார்.
பல சிங்கள புத்திஜீவிகளும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்று பேசியும் எழுதியும் வருகின்றனர்.
ஆனால் சம்பந்தர் அய்யாவும் சுமந்திரனும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
பல மதங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒரு மதத்திற்கு மட்டும் முன்னுரிமை வழங்குவது சமவுரிமை தத்துவத்திற்கு முரணானது.
அதுமட்டுமல்ல மதங்களுக்கு வாய்ப்பு வழங்குவதானது வறுமைப்பட்ட மக்கள் விடுதலை பெற விடாமல் தொடர்ந்தும் அழுத்திவைக்கவே உதவி புரியும்.
இலங்கை மக்கள் அனைவரும் முன்னேற்றம் அடைவதற்கு குறைந்தபட்சம் இலங்கை மதசார்பற்ற நாடாகவேணும் இருத்தல் அவசியம்.

No comments:

Post a Comment