Wednesday, February 28, 2018

சித்திரகுப்தா! இந்த குழந்தையை யார் கொன்றார்கள்?

எமதர்மன்- சித்திரகுப்தா! இந்த குழந்தையை யார் கொன்றார்கள்?
சித்திரகுப்தன்- இது சிரிய நாட்டு குழந்தை. இது அல்லாவின் குழந்தை என்று இயேசுவின் பிள்ளைகள்கொன்றுள்ளார்கள்.
எமதர்மன்- என்ன முட்டாள்தனமாக இருக்கிறது. அது சரி இந்த குழந்தையை அவர்கள் ஏன் கொன்றார்கள்?
சித்திரகுப்தன்- இந்த குழந்தை முஸ்லிம். எனவே பயங்கரவாதியாம். எனவே கொல்லப்படுவதுதான் நியாயமாம்.
எமதர்மன்- என்ன அநியாயம் இது? அந்தளவுக்கு மனிதர்களுக்கு புத்தி கெட்டுவிட்டதா?
சித்திரகுப்தன்- இன்று அல்ல 2009லேயே இது ஆரம்பித்துவிட்டது. பிரபாகரன் பயங்கரவாதி எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று கூறி ஒரு சிறுவனைக் கொன்றார்கள்.
எமதர்மன்- ஆமாம் ஆமாம், அந்த கொடுமையை நானும் கேள்விப்பட்டேன் சித்திரகுப்தா.
சித்திரகுப்தன்- அதுமட்டுமல்ல எமதர்மராசாவே! பயங்கரவாத ஒழிப்பு என்று கூறிக்கொண்டு இரு நாளில் 40 ஆயிரம் மக்களையே கொன்று அழித்தார்கள். மிருகங்கள்கூட தம் இனத்தை இப்படி அழிப்பதில்லை. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் இப்படி கீழ்தரமாக நடந்து கொள்கிறானே. மிகவும் கவலையாக உள்ளது.
எமதர்மன்- அது சரி, இந்த சிறுவன் வந்ததில் இருந்து யாரையோ தேடிக் கொண்டிருக்கிறானே. என்னவாம்?
சித்திரகுப்தன்- ஓ! அதுவா? அவன் இறப்பதற்கு முன்னர் தான் கடவுளிடம் அனைத்தையும் கூறுவேன் என்று தாயிடம் சொல்லியுள்ளான். அதுதான் இப்போ கடவுளைத் தேடுகிறான்.
எமதர்மன்- நல்லது. சிறுவனை கடவுளிடம் கொண்டுபோய் விடுங்கள் சித்திரகுப்தரே!
சித்திரகுப்தன்- அதுதான் பிரச்சனையாக இருக்குது எமதர்மராசாவே!
எமதர்மன்- என்ன பிரச்சனை சித்திரகுப்தா?
சித்திரகுப்தன்- சிறுவன் தங்களை தேடுகிறான் என்று அறிந்ததும் எல்லா கடவுளும் ஓடி ஒளித்துவிட்டார்கள் எமதர்மராசாவே!
எமதர்மன்- நாசமாய் போச்சு. இப்போ நான் என்ன செய்வது?

No comments:

Post a Comment