Wednesday, February 28, 2018

கழுத்து வெட்டின அதிகாரிகளை பாதுகாத்துக்கொண்டு கழுத்து வெட்டுவன் என்று மிரட்டிய அதிகாரிமீது மட்டும் நடவடிக்கை எடுக்குமா இலங்கை அரசு?

•கழுத்து வெட்டின அதிகாரிகளை பாதுகாத்துக்கொண்டு
கழுத்து வெட்டுவன் என்று மிரட்டிய அதிகாரிமீது மட்டும்
நடவடிக்கை எடுக்குமா இலங்கை அரசு?
லண்டனில் தமிழ்மக்களை பார்த்து கழுத்து வெட்டுவேன் என்று மிரட்டிய ராணுவ அதிகாரியை வேலை நீக்கம் செய்வதாக வெளிநாட்டு அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.
ஆயிரக்கணக்கில் தமிழ்மக்களின் கழுத்தை வெட்டிய அதிகாரிகளை பாதுகாத்துவரும் இலங்கை அரசு, வெட்டுவன் என்று மிரட்டிய அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதா என பலரும் ஆச்சரியம் அடைந்தனர்.
அதுவும் சம்பவம் நடந்து 48 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியை பணி நீக்கம் செய்தது உண்மையில் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி தொடர்ந்தும் சேவையில் ஈடுபடலாம் என ஜனாதிபதி மைத்திரி இன்று உத்தரவிட்டதன் மூலம் இந்த ஆச்சரியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கழுத்து வெட்டியவர்களை மட்டுமல்ல கழுத்து வெட்டுவன் என மிரட்டிய அதிகாரி மீதும்கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று ஜனாதிபதி தெளிவாக காட்டிவிட்டார்.
தான் பதவியில் இருக்கும்வரை எந்தவொரு ராணுவவீரன் மீதும் விசாரணை செய்ய அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்தார்.
அதன்படியே கழுத்தை வெட்டுவன் என்று மிரட்டிய ராணுவ அதிகாரியையும் அவர் எவ்வித நடவடிக்கையும் இன்றி காப்பாற்றியிருக்கிறார்.
ஆனால் நமது சம்பந்தரும் சுமந்திரனுமே “ ஜனாதிபதி நல்லவர். எளிமையானவர். நல்லாட்சி செய்கிறார். அவர் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பார்” என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இந்த விடயத்தில் தனது சுயரூபத்தைக் காட்டிய ஜனாதிபதி மைத்திரியை நாம் பாராட்ட வேண்டும்.
இல்லையேல் தாங்கள் கேட்டுக்கொண்டபடியால்தான் நல்லாட்சி அரசு ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை எடுத்தது என்று இந்நேரம் சுமந்திரன் அறிக்கை விட்டிருப்பார்.

No comments:

Post a Comment