Wednesday, February 28, 2018

போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை!

•போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை!
04.02.18 யன்று லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அங்குவந்த சிங்கள ராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கழுத்து வெட்டப்படும் என்று சைகை காட்டி மிரட்டினார்.
இது படம்பிடிக்கப்பட்டு உடனடியாக சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
லண்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதனைக் கண்டித்ததுடன் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியை உடன் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கோரினார்கள்.
அதுமட்டுமல்ல லண்டனில் அகதிகள் தஞ்சம் கோரிய தமிழர்களை திருப்பி அனுப்பாது பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் இலங்கை அரசு வேறுவழியின்றி சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரியை பதவி நீக்கியதுடன் அவர் மீது விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளது.
இதுவரை தமிழ் மக்கள்மீது கைவைக்கும் அதிகாரிகளை கேட்பதற்கு யாருமற்ற நிலை இருந்தது.
ஆனால் லண்டன் தமிழ் மக்கள் தமது போராட்டம் மூலம் அந்த நிலையை மாற்றியுள்ளார்கள்.
தமிழ் மக்கள் ஒன்றுபட்டு போராடினால் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையாளிகளையும் கூண்டில் ஏற்றலாம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
குறிப்பு- இன்று போராட்டத்தை தீர்மானிக்கும் முக்கிய சக்திகளில் ஒன்றாக முகநூல் இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment