Wednesday, February 28, 2018

ஆசிரியர் சதீஸ்குமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்
தமிழ்நாடு திருச்சியில் இருக்கும் தமிழ் ஆசிரியர் சதீஸ்குமார் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் பலரும் இவ் நூலை ஆர்வமுடன் வாங்கியிருந்தனர். அவ்வாறு வாங்கிப் படித்ததும் அல்லாமல் அது குறித்து தனது கருத்துக்களையும் எனக்கு தெரியப்படுத்தியுள்ளார் தமிழ்ஆசிரியர் சதீஸ்குமார் அவர்கள்.
ஆசிரியர் சதீஸ்குமார் அவர்களின் உணர்வுகளை பாராட்டுவதோடு எனது நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
ஒரு ஈழப்போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் என்ற நூலில் முக்கனியின் சுவையைக்கண்டேன்
ஒரு தமிழ்த்தேசிய போராளியை எதிர்கால தமிழ் சமுதாயம் அறிந்துகொள்ள கூடாது என்பதற்காக வங்கி கொள்ளையன் என்று நாடகமாடி கல்லெறிந்து போதும் தன்னிடம் ஆயுதங்கள் இருந்தும் மக்கள் மீது பிரயோகிக்காமல் மரணத்தை எற்றுக் கொண்டு தமிழ்மக்களை நேசித்த ஒரு தவைரின் வரலாற்றை கூறும் நூல் இது.
தமிழ் மண் மீட்க புறப்பட்ட அந்த வேங்கையை வங்கிக் கொள்ளையன் என்று பொய் பழிச்சுமத்தி கொலைச்செய்யப்பட்டு மறைக்கப்பட்ட வரலாற்றை இன்றைய தமிழ் ஆர்வலர்கள் அறிய ஆசிரியர் எடுத்த அரிய முயற்சி இந்நூல்
தமிழ்த் தேசத்திற்கு உயிர் துறந்த உத்தமர்களின் வரலாற்றையறிய உன்னத படைப்பு
ஈழத்தில் இந்திய அடக்குமுறையும் தமிழகத்தின் வளங்கள் சுரண்டி புயல் பாதிப்பிற்கு உதவாத இந்தியத்தின் நிலை அறியவைக்கும் நூல்.
எம் இனத்தை அழிப்பவனுக்கு வாரி பணத்தை அளிப்பதை கண்டு ஆசிரியரின் உணர்ச்சி வெளிப்பாடு
ஆட்சி மாறியும் காட்சி மாறாது நிலை கண்டு வேதனை வெளிப்பாடு
கொள்ளையன் என்று நாடகமாடி கல்வீச்சு செய்து கொள்ளும் போது மரணத்தை எற்றுக் கொண்டு தலவைர் எடுத்துரைக்கும் விதம்
இவர் தம் பிழையை மன்னித்தருள்க என்று இயேசு பிரான் மரணத்தை எற்றுக் கொண்டது போல் ஆசிரியர் கையாண்ட விதம் போற்றதற்குரியது
தமிழர்கள் இல்லங்களில் அலங்கரிகப்படவேண்டிய தங்கப்பேழை

No comments:

Post a Comment