Saturday, May 26, 2018

எமது நாட்டு அரசே எம்மீது குண்டு போட்டது

எமது நாட்டு அரசே எம்மீது குண்டு போட்டது
எமது நாட்டு ராணுவமே எம்மை சுட்டுக்கொன்றது
இரண்டுநாளில் 40ஆயிரம் மக்களை கொன்று புதைத்துவிட்டு
இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றார்கள்
.
“வடக்கின் வசந்தம்” என்றார்கள்
“கிழக்கின் உதயம்” என்றார்கள்
ஒரு நாசமறுப்பும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை
முள்ளிவாய்க்கால் கடல் அலையைக் கேட்டுப்பாருங்கள்
அது எமது ஓராயிரம் வலிகளை ஆர்ப்பரித்து சொல்லும்
அன்றும் நடந்தோம்
இன்றும் நடக்கிறோம்
இனியும் நடப்போம்
ஆனால் ஒருபோதும் வீழ்ந்து கிடந்துவிடமாட்டோம்.
என்றாவது ஒருநாள்
எமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
தொடர்ந்து நடந்துகொண்டேயிருப்போம்!
போராடாத இனம் விடுதலை பெற்றதில்லை
போராடிய இனம் விடுதலை பெறாமல் விட்டதில்லை

No comments:

Post a Comment