Wednesday, May 16, 2018

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்.

நீங்கள் அனைத்து மலர்களையும் நசுக்கி விடலாம்.
ஆனால் வசந்தம் வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது
இவர்கள் பதுங்குகுழியில் மாண்டுபோய்விட மாட்டார்கள்
இவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள்
இவர்கள் தமக்கே உரிய மொழியில் வினா எழுப்புவார்கள்
இவர்கள் தமக்கே உரிய வழியில் விடையும் காணுவார்கள்
இவர்கள் உங்களை
மறக்கவும் மாட்டார்கள்
மன்னிக்கவும் மாட்டார்கள்
ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது என்பதை
இவர்கள் நன்கு அறிவார்கள்.

No comments:

Post a Comment