Wednesday, May 16, 2018

நாம் சாகடிக்கப்படலாம். ஆனால் ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது.

நாம் சாகடிக்கப்படலாம். ஆனால்
ஒரு போதும் தோற்கடிக்கப்பட முடியாது.
நாம்,
உரிமையை இழந்தோம்
உடமையை இழந்தோம்
உயிர்களை இழந்தோம்- ஆனால்
உணர்வை இழக்கவில்லை.
காலில் மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது
தமிழன் மட்டும் அடிமையாக கிடந்திட முடியுமா?
என்ன காரணத்திற்காக போராடினோமோ
அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
எனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது
தவிர்க்க முடியாதது.
எமது போராட்டம் வெற்றி பெறவில்லை என்பது உண்மைதான்.
ஆனால் அதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அல்ல
ஏனெனில் போராட்டத்திற்கு ஒருபோதும் தோல்வி இல்லை.
எனவேதான் எம்மை தோற்கடிக்கப்பட முடியாது என்கிறோம்.
குனிந்து வா என்றால் தவழ்ந்து செல்லும் விசுவாசிகளாக எம் தலைவர்கள் இருக்கலாம்.
எதிரி வீசும் இறைச்சித்துண்டுக்கு வாலாட்டும் நாய்க்குட்டிகளாகவும் அவர்கள் இருக்கலாம்.
ஆனால் தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழர்களின் போராட்டத்தை அடக்கிவிடலாம் என எதிரி நினைப்பது ஒருபோதும் நிறைவேறாது.
எனவேதான் உரத்து சொல்கிறோம்
இறுதி வெற்றி உறுதி தமிழ் மக்களுக்கு.
ஒன்றாய் கூடுவோம்
ஒருமித்து குரல் எழுப்புவோம்

No comments:

Post a Comment