Saturday, May 26, 2018

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அதை புலிகள் குழப்பிப்போட்டார்கள் என்றார்கள்
சரி. இப்ப புலிகள் இல்லைத்தானே. ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என்று கேட்டால்
புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றிருக்காவிட்டால் இந்தியா தீர்வு பெற்று தந்திருக்கும் என்று பதில் கூறுகிறார்கள்.
அப்படியென்றால், இந்திராகாந்தியைக் கொன்றமைக்காக சீக்கிய இனம் புறக்கணிக்கப்படவில்லையே. சீக்கிய மன்மோகன்சிங்கைத்தானே சோனியா பிரதமர் ஆக்கினார். தமிழ் இனத்தை மட்டும் ஏன் பழிவாங்க வேண்டும்?
ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்காவிடினும்; இந்தியா ஈழத் தமிழருக்கு விடுதலை பெற்று தந்திருக்காது. இதுவே உண்மை.
காங்கிரஸ் அரசானாலும் பாஜக அரசானாலும் ஒருபோதும் ஈழத் தமிழருக்கு உதவப்போவதில்லை. அவர்களுடைய அக்கறை எல்லாம் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பே.

No comments:

Post a Comment