Saturday, May 26, 2018

இந்த சிறுவன் அழுதவிட்டு ஓய்ந்துவிடுவான்

இந்த சிறுவன் அழுதவிட்டு ஓய்ந்துவிடுவான்
என்று மட்டும் எண்ணிவிடாதீர்கள்
இவன் தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்த மண்ணே – அவன் முன்
மூதாதையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்த மண்ணே - அவர்கள்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இம் மண்ணே
இன்னுயிர் தந்து இவனை ஈன்று வளர்த்து
அருள் ஈந்ததும் இம் மண்ணே - இவன்
அன்னையர் தோளில் ஆயுதம் ஏந்தி
சமர் புரிந்ததும் இம் மண்ணே - அவர்கள்
உடல் நிர்வாணமாக்கி வீழ்ந்தப்பட்டபோதும்
தாங்கி நின்றதும் இம் மண்ணே - தங்கள்
உறவுகளின் குருதி வடிந்த உடலை கண்ட
இவன் மனம் வெறுமனே அடங்கித்தான் கிடந்திடுமோ?
குறிப்பு- இவன் தனக்குரிய நியாயத்தை தனக்கே உரிய மொழியில் நிச்சயம் கேட்பான்.

No comments:

Post a Comment