Wednesday, May 16, 2018

•இருட்டு அறையில் ஒரு முரட்டு குத்து!

•இருட்டு அறையில் ஒரு முரட்டு குத்து!
அவ்வளவு ஏன் ….. இங்கிட்டு விக்கி ஜயா என்று ஒரு முதல்வர் இருக்கிறார். அவர் என்ன முதல்வர் வேலையா பார்க்கிறார்? அந்த கருமத்தைத் தவிர மத்த எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு திரியிறார்.
அண்மையில் இந்தியா போனப்ப அங்கை இருட்டு அறையில பல சந்திப்புகள் நடந்ததாம். இப்ப வந்து முள்ளிவாய்க்கால் நிகழ்வை தானே நடத்துவேன் என்று மாணவர்களுடன் அடம் பிடிக்கிறார்.
தான் உட்காருவதற்கு ஒரு லட்சம் ரூபாவில் கதிரை வாங்கியவர் அவைத் தலைவர் சிவஞானம். அவர் முன்னாள் அமைச்சர் சத்தியலிங்கத்தை ஊழல் குற்றச்சாட்டில் இருந்து நீக்குவதாக ஒருதலைப்பட்டசமாக அறிவிக்கிறார். அதற்கு எதிர்க்கட்சிதலைவர் தவராசா ஒத்து ஊதுகிறார். முதல்வர் ஜயாவோ அப்பாவியாக உட்கார்ந்து இருக்கிறார்.
மாகாணசபையின் ஆயுட்காலம் இன்னும் 3 மாதமே இருக்கிறது. அதற்குள் மக்களுக்கு ஏதும் நன்மை செய்வதை விடுத்து மாணவர்களுடன் போட்டி போட்டு ஒற்றுமையை குழப்ப நினைப்பது முதல்வர் ஜயாவுக்கு அழகு அல்ல.

No comments:

Post a Comment