Wednesday, May 16, 2018

ஓடுவோம் இறுதி இலக்கை எட்டும் வரை

ஓடுவோம்
இறுதி இலக்கை எட்டும் வரை
ஓட முடியாதபோது
நடப்போம்
நடக்க முடியாதபோது
தவழ்ந்தாவது செல்வோம்
ஆனால்
ஒருபோதும் இயங்குவதை
நிறுத்த மாட்டோம்!
முள்ளிவாய்க்காலில்
நாம் ஒன்று சேருவது
ஒப்பாரி வைத்து அழுவதற்காக அல்ல
மீண்டும் எழுந்து நிற்பதற்காகவே!
நாம்
பாலியல் வல்லுறவு செய்யப்படலாம்
கொலை செய்யப்படலாம் -ஆனால்
ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது!
இறுதி வெற்றி உறுதி எமக்கு!

No comments:

Post a Comment