Saturday, May 26, 2018

ஏய் கார்ல் மார்க்ஸ்!

ஏய் கார்ல் மார்க்ஸ்!
நீ பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும்!
நீ அகதியாக வந்தது பிரித்தானியாவுக்கு
நீ குடும்பமாக வாழ்ந்தது பிரித்தானியாவில்
நீ மருத்துவ வசதி பெற்றது பிரித்தானியாவில்
நீ பியர் குடித்தது பிரித்தானியா பப்பில்
நீ ஆராய்ச்சிக்கு நூலகம் பாவித்தது பிரித்தானியாவில்
ஆனால் இதையெல்லாம் தந்த மகாராணியின் குடும்பத்தை மறந்து
நன்றி கெட்டத்தனமாக புரட்சி பற்றி பேசலாமா?
பிரித்தானிய அரசையும் அதன் கொடியையும் எதிர்க்கலாமா?
முதலாளித்துவத்திற்கு எதிரான மூலதனம் புத்தகத்தை எழுதலாமா?
நீ உடனடியாக பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும்!
இப்படிக்கு
பிரித்தானிய மகாராணியின் விசுவாசமிக்க
தமிழ் குஞ்சுகள்
குறிப்பு-
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவிய நாடுகளில் பிரிட்டனும் ஒன்று.
எனவே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பிரித்தானிய கொடி தேவையில்லை என தமிழ்சொலிராறிற்றி அமைப்பு கோரியது.
உடனே மகாராணியின் விசுவாசமிக்க தமிழர் சிலர் அவர்களை பிரித்தானியாவை விட்டு வெளியேறும்படி எழுதுகின்றனர்.
நல்லவேளை இவர்கள் காலத்தில் கார்ல்மாக்ஸ் இல்லை. இருந்திருந்தால் அவரையும் வெளியேறும்படி எழுதியிருப்பார்கள்.

No comments:

Post a Comment