Wednesday, May 16, 2018

அற்பனுக்கு பவசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!

•அற்பனுக்கு பவசு வந்தால்
அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்!
மழைக்கு குடை பிடிக்கிறது பார்த்திருக்pறோம்
வெயிலுக்கு குடை பிடிக்கிறது பார்த்திருக்கிறோம்
ஆனால் மண்டபத்திற்குள் குடை பிடிக்கிறதை
முதன் முதலாக இப்பதான் பார்க்கிறோம்.
அமெரிக்க ஜனாதிபதி தன் கையாலே தனக்கு குடை பிடிக்கிறார்
இங்கிலாந்து ராணி தன் கையாலே தனக்கு குடை பிடிக்கிறார்
ஆனால் எமது தமிழ் தலைவர்கள் தம் கையால் தமக்கு குடை பிடிப்பதில்லை.
அவர்களுக்கு குடை பிடிக்கவென்றே இன்னொரு ஆளை வைத்திருக்கின்றனர்.
அந்த குடை பிடிக்கும் ஆளுக்கும் மக்களின் வரிப்பணத்தில் இருந்தே சம்பளமும் வழங்கப்படுகிறது.
கீழே உள்ள படத்தை பாருங்கள்,
இவர் வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம். முன்னாள் சுகாதார அமைச்சரும்கூட.
மண்டபத்pற்குள் இருக்கும் தனக்கு குடை பிடிப்பது குறித்து இவரும் வெட்கப்படவில்லை
மண்டபத்திற்குள் இருக்கும் இவருக்கு குடை பிடிப்பது குறித்து பிடிப்பவரும் வெட்கப்படவில்லை.
இதுகுறித்து மண்டபத்திற்கள் இருந்த எவருமே வெட்கப்படவில்லை.
இவர் அமைச்சரானவுடன் தனது குடும்பத்தவர்களுக்கே வெலை கொடுத்து சம்பளம் பெற்றார்.
மருத்துவமனை உணவிற்கு வாங்கும் காய்கறிகளில்கூட ஊழல் செய்தார். இதனால் “கத்தரிக்காய் அமைச்சர்” என்று பெயர் பெற்றார்.
என்னே கேவலம் இது!

No comments:

Post a Comment