Wednesday, May 16, 2018

தம்பி பிரதீபன்! எங்களை மன்னித்துவிடு!

•தம்பி பிரதீபன்!
எங்களை மன்னித்துவிடு!
நீ தமிழனாக பிறந்தது தவறு இல்லை.
ஆனால், தமிழ் தலைவர்களின் மகனாக பிறக்காதது பெருந்தவறு
நீ சம்பந்தர் அய்யாவின் மகனாக பிறந்திருந்தால்
அவருடன் இரண்டு சொகுசு பங்களாவில் சுகமாக வாழ்ந்திருப்பாய்
நீ மாவை சோனதிராசாவின் மகனாக பிறந்திருந்தால்
இந்தியாவில் படித்துவிட்டு வந்து பிரதேசபை உறுப்பினராகியிpருப்பாய்
நீ சுமந்திரனின் மகனாக பிறந்திருந்தால்
கொழும்பிலும் பின்னர் லண்டனிலும் நன்கு படித்திருப்பாய்
நீ சரவணபவனின் மகனாக பிறந்திருந்தால்
ஜனாதிபதி முன்னிலையில் பிறந்நாள் கொண்டாடியிருப்பாய்
நீ விஜயகலா மசேஸ்வரனின் மகனாக பிறந்திருந்தால்
பிரதமர் முன்னிலையில் அரங்கேற்றம் நடத்தியிருப்பாய்
நீ செல்வம் அடைக்கலநாதனின் தத்து பிள்ளையாக இருந்திருந்தால்
திருச்சியில் ஆடம்பரமாக திருமணம் செய்திருப்பாய்
ஆனால் நீயோ, சாதாரண தமிழனாக அதுவும் ஏழைத் தமிழனாக பிறந்துவிட்டாய்.
நீயும் வெளிநாடு போயிருந்தால் உன் 50 வது பிறந்தநாளை “பாகுபலி” மன்னர் போல் கொண்டாடியிருப்பாய்.
அல்லது உனது நாய்க்கு வளைகாப்போ அல்லது பிறந்தநாளோ கொண்டாடியிருப்பாய்
ஆனால் நீயோ தமிழ் இனத்திற்காக போராளியானாய். அதனால் புற்றுநோய்க்கு ஆளானாய்.
உனது புற்றுநோய்க்கு மருத்துவ சிக்pச்சை பெற உதவும்படி பலரிடம் கெஞ்சினாய். ஆனால் எந்த தலைவருமே உனக்கு உதவவில்லை.
எமது தலைவர்களுக்கு நீ இறந்தது பற்றியும் கவலை இல்லை. முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து இறப்பது பற்றியும் அக்கறை இல்லை.
அவர்களுடைய அக்கறை எல்லாம் அடுத்த தேர்தலில் தமக்கு பதவி பெறுவது மட்டுமே.
முடிந்தால் உனது போட்டோவை தமிழ் தலைவர்களிடம் கொடுத்துவிடு. அவர்கள் அடுத்த தேர்தலுக்கு அதனை பயன்படுத்திக் கொள்வார்கள்.
அதுவரை எங்களை மன்னித்துவிடு
இப்படிக்கு,
அப்பாவி தமிழர்கள்.

No comments:

Post a Comment