Wednesday, May 16, 2018

•ஓ , கனவான்களே!

•ஓ , கனவான்களே!
இந்த சிறுவன் ஏன் கொல்லப்பட்டான்?
இந்த சிறுவனும் பயங்கரவாதியா?
பிரபாகரனின் மகன் என்பதைத் தவிர வேறு என்ன தவறு செய்தான் இந்த சிறுவன்?
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் என்றால்
சரணடைந்த சிறுவனுக்கு சாக்லேட் கொடுத்து கொன்றவர்களை என்னவென்று அழைப்பது?
மீதியிருக்கும் தமிழர்களையும் என்ன சொல்லி கொல்லப் போகின்றீர்கள்?
அதையும் ஒருக்கால் கூறிவிடுங்கள் கனவான்களே!
கருணா சொல்லியே கோத்தபாயா ராஜபக்ச இச் சிறுவனைக் கொன்றதாக கூறுகிறார்கள் சிலர்.
பிரபாகரன் பயங்கரவாதி எனவே அவர் மகனும் பயங்கரவாதி என்று சிறுவனின் கொலையை நியாயப்படுத்துகிறார் சுப்பிரமணியசுவாமி
குழந்தைப் போராளிகள் என்று ஓடிவந்து நடவடிக்கை எடுத்த ஜநா வும்கூட இந்த சிறுவன் கொலை பற்றி நியாயம் கூற மறுக்கிறது.
ஜேவிபி தலைவர் விஜயவீராவை கொன்ற இலங்கை அரசு அவரது மனைவியையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தது
ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சரணடைந்தும் ஈவு இரக்கமின்றி கொன்றுள்ளது இலங்கை அரசு.
இதில்கூட இனவாதம் காட்டும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கும் என்று எப்படி நம்புவது?

No comments:

Post a Comment