Saturday, May 26, 2018

தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல

•தமிழ் மக்கள் இலங்கை அரசுக்கு மட்டுமல்ல
உலகத்திற்கும் ஒரு செய்தி சொல்லியிருக்கிறார்கள்.
தாயகத்தில் மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழ்மக்கள் ஒன்றுகூடி ஒருமித்த குரலில் ஒரு செய்தி கூறியுள்ளார்கள்.
ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி தமிழக தமிழர்கள், மலேசிய தமிழர்கள் என அனைத்து தமிழரும் ஒன்றுகூடி ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்கள்.
ஆம். தமிழர்களை கொல்லப்படலாம். ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட முடியாது என்ற செய்தியே அது.
சொந்த நாட்டு மக்கள் மீது போர் நடத்தியவர்கள். அந்த போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று வெற்றிவிழா கொண்டாடியவர்கள் வேறு வழியின்றி இராணுவத்திற்கு தொடர்ந்தும் அதிக செலவு செய்து வருகின்றனர்.
ஆம். தமிழர்கள் மீண்டும் எழுவார்கள் என்பது அவர்களுக்கு நன்கு தெரிந்து உள்ளது.
அதனால்தான் போர்க்காலத்தில் ஒதுக்கப்பட்ட அதேயளவு பணத்தை இப்பவும் ராணுவத்திற்கு ஒதுக்கி வருகின்றனர்.
பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை காப்பாற்றி விட்டோம் என்றார்கள். ஆனால் தமிழ்மக்கள் அந்த பயங்கரவாதிகளுக்கு அஞ்சலி செலுத்த இப்படி ஆயிரக்கணக்கில் திரண்டு அவாகள் முகத்தில் கரியை பூசிவிட்டனர்.
இப்போது இலங்கை அரசு மட்டுமன்றி உலக நாடுகளும்கூட தமிழ் மக்களின் செய்திக்கு என்ன பதில் அளிக்கப் போகிறார்கள்?
கொன்று புதைத்தால்
முளைத்து எழுவோம்
துண்டு துண்டாய் வெட்டி
கடலில் வீசி எறிந்தாலும்
முள்ளிவாயக்கால் கடல் அலைபோல்
மீண்டும் மீண்டும் ஆர்ப்பரித்து எழுவோம்!

No comments:

Post a Comment