Wednesday, November 30, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 37 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 37 நாட்கள் மட்டுமே!
சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்தபடி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ளது.
37 நாட்களுக்குள் தீர்வை பெற்று தருவதற்காக மாவை சேனாதிராசா அவர்களின் கரங்கள் அயராது உழைக்கின்றன போலும்.
அதனால்தான் அவருக்கு குடை பிடிக்க இன்னொரு தமிழரின் கரங்கள் அவருக்கு தேவையாக இருக்கின்றது போலும்.
மாவை சேனாதிராசா அவர்கள் தம் வாழ்வில் நான்கு வருட சிறைவாழ்வைத் தவிர வேறு எந்த தியாகத்தையும் செய்யாதவர்.
ஆனால் அவர் இதுவரை நான்கு தடவைகளுக்கு மேல் பாராளுமன்ற எம்.பி பதவியை பெற்று அனுபவித்துள்ளார்.
அவருடைய ஒரு மாத சம்பள மற்றும் சலுகைகள் சுமார் இரண்டு லட்சம் ரூபா. அவர் குடும்பம் இருப்பது இந்தியாவில். அவர் பிள்ளைகள் வாழ்வது லண்டனில்.
அவர் அந்த காலத்தில் இளைஞர்களை போராட்டத்திற்கு வரும்படி ஒவ்வொரு மேடைகளிலும் அறைகூவல் விடுத்தார். ஆனால் தமது பிள்ளைகளில் ஒருவரைக்கூட அவர் போராட்டத்திற்கு விடவில்லை.
அமிர்தலிங்கத்தின் மகன் பகிரதன் மதுரையில் மருத்துவக்கல்வி கற்றுக் கொண்டிருந்த வேளையில (1984ல்) தமிழீழ தேசிய ராணுவம் TENA என்ற இயக்கத்தை நடத்தினார்.
தமது இயக்கத்திற்கு இளைஞர்களை எடுத்து அனுப்பும்படி இந்த மாவை சேனாதிராசாவுக்கே அப்போது அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.
பகிரதன் அனுப்பிய கடிதமும் அந்த கடிதம் கொண்டு வந்த நபரும் மன்னாரி;ல் தள்ளாடி ராணுவ செக் போஸ்டில் பிடிபட்டன.
இந்த செய்தி உடனே பத்திரிகையில் வெளிவந்தன. எந்த நேரமும் மாவை சேனாதிராசா கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.
ஆனால் அதிசயம் நடந்தது. அமிர்தலிங்கம் ஜே.ஆர் உடன் தொலைபேசியில் பேசினார். கைது செய்யப்பட்ட இளைஞன் உடனே விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டான்.
அரசியல் தலைவர்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துக்கொண்டு சாதாரணமான மக்களின் பிள்ளைகளை போராட வைத்தார்கள் எனபதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.
அதுமட்டுமல்ல, தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஆபத்து வந்தபோது ஜே.ஆர் ஜெயவர்த்தனாவுடன் தொலைபேசியில் பேசி தப்பித்துக்கொண்டார்கள் என்பதற்கும் இது ஒரு உதாரணமாகும்.
இனியாவது தமிழ் மக்கள் இந்த போலித் தலைவர்களை இனம் காண வேண்டும்.

No comments:

Post a Comment