Wednesday, November 30, 2016

•கைதிகள் விடுதலை கோரி தற்கொலை செய்த மாணவன் செந்தூரனை நினைவு கூர்வோம்!

•கைதிகள் விடுதலை கோரி தற்கொலை செய்த
மாணவன் செந்தூரனை நினைவு கூர்வோம்!
கடந்த வருடம் இதே காலங்களில் கைதிகளை விடுதலை செய்யக்கோரி யாழ் மாணவன் செந்தூரன் தன் உயிர் ஈர்த்தான்.
அவனது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இலங்கை அரசு அவனது மரணத்தைக்கூட மதிக்கவில்லை.
தனது குடும்பம் ஏழ்மை நிலையில இருந்தும் அதனைப் பொருட்படுத்தாது சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக செந்தூரன் தன் உயிர் கொடுத்தான்.
தான் தற்கொலை செய்தால் தனது மரணம் எழுச்சியைக் கொடுக்கும். அது கைதிகளின் விடுதலைக்கு வழிவகுக்கும் என அந்த அப்பாவி மாணவன் நம்பினான்.
இலங்கை அரசு மட்டுமல்ல தமிழ் தலைவர்கள்கூட மாணவன் செந்தூரன் இழப்பை மறந்துவிட்டனர். அவர்களுடைய கவனம் எல்லாம் தமக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதில்தானே இருக்கிறது.
நடிகைராதாவையும் அவர் மகள் கார்த்திகாவையும் அழைத்து வந்து யாழ் டில்கோ ஓட்டலில் ஆடுபவர்கள் மாணவன் செந்தூரனை நினைவில் வைத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ம் திகதி கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த வருடம் நவம்பர் 7ம் திகதியும் கடந்துவிட்டது. ஆனால் இன்னும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இன்னும் எத்தனை செந்தூரன்கள் இறந்த பின்பு இந்த விடயத்தை சம்பந்தர் அய்யா கவனத்தில் எடுப்பார் என்று தெரியவில்லை.
ஒரு வாழ வேண்டிய இளம் சிறுவன் மரணித்த பின்புகூட இந்த கிழட்டு அரசியல்வாதிகளுக்கு உணர்வு வரவில்லை என்றால் தமிழ் மக்கள் என்னதான் செய்ய முடியும்?

No comments:

Post a Comment