Sunday, November 20, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 42 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 42 நாட்கள் மட்டுமே!
சம்பந்தர் அய்யா தமிழ் மக்களிடம்; வாக்குறுதியளித்தபடி தீர்வு கிடைக்க இன்னும் 42 நாட்கள் மட்டுமே உள்ளது.
மறப்பது தலைவர்கள் இயல்பு. ஆனால் நினைவூட்ட வேண்டியது மக்களின் கடமையல்லவா!
அதுதான் இனி வருட இறுதிவரை அடிக்கடி சம்பந்தர் அய்யாவுக்கு நினைவூட்டிக் கொண்டேயிருப்போம்.
சம்பந்தர் அய்யாவுக்கு நினைவூட்டுவது முட்டாள் தனமானது என்று கூறி இரு கேலிப்படங்களை நண்பர் ஒருவர் அனுப்பியிருக்கிறார். (அதனையும் இதில் இணைத்துள்ளேன்.)
எமது வாக்கைப் பெற்று பதவி பெற்ற தலைவர் சம்பந்தர் அய்யாவிடம் எமக்கு அளித்த வாக்குறுதி என்னவாயிற்று என்று கேட்பது முட்டாள்தனம் என்றால் அந்த முட்டாள்தனத்தை தொடர்ந்து செய்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை.
மக்களை ஏமாற்ற நினைப்போர் மக்கள் தண்டனையில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது. இதற்கு சம்பந்தர் அய்யாவும் விதிவிலக்காக இருக்க முடியாது.
வருட இறுதிக்குள் தீர்வு பெற்று தர வேண்டும். இல்லையேல் வாக்குறுதி அளித்து பெற்ற பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment