Wednesday, November 30, 2016

•இவர்களை வாழ்த்துவோம்!

•இவர்களை வாழ்த்துவோம்!
டென்மார்க் நாட்டில் இன்று ரகிஸ் இராஜலிங்கம், கைடி பிற்றர்ஸன் தம்பதியர் திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
அவர்கள் தமது திருமண நிகழ்வை முன்னிட்டு யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்லத்து முதியோர்களுக்கு உணவளித்து மகிழ்ந்துள்ளனர்.
இவர்களுடைய தயவால் சுவையான உணவைப் பெற்றுக்கொண்ட முதியோர்கள் யாவரும் இவர்களுக்கு தமது வாழ்த்துகளை மனதார தெரிவித்துள்ளனர்.
வீண் பகட்டு ஆடம்பர செலவுகளை தவிர்த்து இவ்வாறான செயல்கள் மூலம் ஒரு நல்ல முன்மாதிரியைக் காட்டியுள்ள இராஜலிங்கம் தம்பதியினர் உண்மையில் பாராட்டுக் குரியவர்கள்.
அவர்களை பாராட்டுவதோடு அவர்களுக்கு எமது அன்பு நிறைந்த வாழ்த்துகளை தெரிவிப்போம்.
இனியாவது கெலிகப்டரில் சாமத்திய சடங்கு செய்வோர், ஆடம்பரமாக பிறந்தநாள் , திருமணம் போன்றவற்றை செய்வோர் திருந்தட்டும்.

No comments:

Post a Comment