Wednesday, November 30, 2016

•ஜே.வி.பி க்கு ஒரு நியாயம். புலிகளுக்கு இன்னொரு நியாயம் இதுதான் நல்லாட்சி அரசின் (இனவாத) நியாயமா?

•ஜே.வி.பி க்கு ஒரு நியாயம்.
புலிகளுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் நல்லாட்சி அரசின் (இனவாத) நியாயமா?
செய்தி - மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த அனுமதிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்த்தனா தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என குற்றம்சாட்டி அதனுடன் 60 ஆயிரம் சிங்கள இளைஞர்களை கொன்றது இலங்கை அரசு.
புலிகள் அமைப்பை அழிப்பதாக கூறி முள்ளிவாய்க்காலில் கடைசி இரண்டு நாளில் மட்டும் 40 அயிரம் தமிழ் மக்களைக் கொன்றது இலங்கை அரசு.
ஜே.வி.பி தலைவர் விஜயவீராவைக் கொன்ற இலங்கை அரசு அவருடைய மனைவி பிள்ளைகளைக் கொல்லவில்லை. அவர்களை பாதுகாப்புடன் படிக்க வைத்தது
ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகனைக்கூட விட்டு வைக்காமல் சுட்டுக் கொன்றது இலங்கை அரசு.
விஜயவீராவுக்கு சிலை வைக்க அனுமதித்துள்ள இலங்கை அரசு பிரபாகரனின் தாய் தந்தையரின் வீட்டைக்கூட இடித்து தரை மட்டமாக்கியுள்ளது.
மறைந்த தமது வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த ஜே.வி.பி யை அனுமதிக்கும் இலங்கை அரசு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழ் மக்களுக்கு அனுமதி மறுக்கிறது.
இதுதான் நல்லாட்சி அரசின் நியாயமா?
இதுதான் அதன் நல்லிணக்க வழிமுறையா?

No comments:

Post a Comment