Wednesday, November 30, 2016

•இது தேவைதானா?

•இது தேவைதானா?
புலம்பெயர் நாடுகளில் உள்ள சிலர் தம் மகளின் சாமர்த்திய சடங்கை பெரிய விழாவாக நடத்துவதுடன் அதனை பெருமையாக முகநூல்களிலும் பதிவு செய்கின்றனர்.
இது குறித்து பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் இவ்வாறான சம்பவங்கள் தொடரவே செய்கின்றன. அண்மையில் ஜெர்மனியில் இப்படியான ஒரு சம்பவம் நடந்துள்ளது.
கீழ்வரும் இணைப்பில் அதனை காணலாம்.
பெண்கள் பருவமடைவது என்பது அவர்களது உடலில் ஏற்படும் ஒரு இயற்கையான மாற்றம்தானே. அதற்கு எதற்கு விழா எடுக்க வேண்டும்?
பழைய காலத்தில் தமது வீட்டில் ஒரு பெண் திருமணத்திற்கு தயாராக இருக்கிறாள் என்பதைக் காட்டுவதற்காக இவ்வாறான சடங்குகள் தோன்றியிருக்க கூடும்.
ஆனால் இன்று அதுவும் வெளி நாடுகளில் இவை தேவைதானா? அதுவும் இப்படி ஆடம்பரமாக செலவு செய்ய வேண்டுமா?
உண்மையில் இந்த சடங்கால் சம்பந்தப்பட்ட பெண் பிள்ளைகள்கூட சங்கடப்படுகிறார்கள். ஏனெனில் அவர்களுடன் கூடப் படிக்கும் வெள்ளையின மாணவர்களால் இது கேலி செய்யப்படுகின்றது.
அதுமட்டுமன்றி வன்னியில் வறுமையின் கொடுமையினால் பெத்த பிள்ளைகளையே கிணற்றில் வீசிக் கொல்லும் அவல நிலை இருக்கும்போது வெளிநாடுகளில் இப்படி ஊதாரிச் செலவு செய்வது நியாயமா?
இன்னும் சிலர் கிரடிக்காட்டில் கடன்பட்டு இப்படி ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இதனால் அவர்கள் குடும்பத்தில் மேலும் பிரச்சனைகள் உருவாகின்றன.
சாமத்திய சடங்கு செய்வது ஒரு பெற்றோரின் சொந்த விருப்பம். அது குறித்து கேள்வி கேட்க முடியாது என்று கருத்து எழுத சிலர் வருவார்கள்.
பிறந்த நாளின் பெயரால், திருமணத்தின் பெயரால் எல்லாம் ஆடம்பர நிகழ்வுகள் நடக்கும்போது சாமத்திய சடங்கின் பெயரால் ஆடம்பர செலவு செய்வது என்ன தவறு என்று இன்னும் சிலர் கேட்கலாம்.
மாவீரர் பெயரால் பல மில்லியன் செலவு நடக்கிறது. அதைக் கேட்க மாட்டீர்கள். ஒரு தந்தை தனது மகளின் சந்தோசத்திற்காக செய்யும் சாமர்த்திய சடங்கை மட்டும் கேட்க வந்துவிட்டீர்கள் என்றுகூட கேட்பதற்கு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் நான் கூற விரும்புவது என்னவெனில் உலகம் உருண்டை என்று முதல் முதல் கூறியவனை முட்டாள் என்று சிறையில் அடைத்து கொன்ற வரலாறு மனிதனுக்கு உண்டு.

No comments:

Post a Comment