Sunday, November 20, 2016

•செத்த மாட்டில் இருந்து கழன்று போகும் உண்ணிகள் போல!

•செத்த மாட்டில் இருந்து கழன்று போகும் உண்ணிகள் போல!
மாடு உயிருடன் இருக்கும்வரை அதில் ஒட்டி இருந்து ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் உண்ணிகள், மாடு செத்தவுடன் அதில் இருந்து நைசாக கழன்று விடுகின்றன.
அதுபோல் புலிகள் பலமாக இருக்கும்வரை அவர்களுடன் ஒட்டி இருந்து பதவி நலன்களை அனுபவித்தவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் உண்ணிகள் போல் கழன்று விடுகின்றனர்.
உண்ணிகள் போல் கழன்றுவிட்டாலும் பரவாயில்லை, கொஞ்சம்கூட நன்றி இல்லாமல் புலிகளை தூற்றுகின்றனர்.
இதோ இந்த படத்தில் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன் பின்னால் பைல் கட்டுகளை தூக்கிக்கொண்டு வரும் உண்ணி யார் என்று தெரிகிறதா?
இவர்தான் இன்றைய எதிர்கட்சிதலைவர் சம்பந்தன் அய்யா. இவர் பாராளுமன்றத்தில் கூறுகிறார் “புலிகள் பயங்கரவாதிகள், அவர்களை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தது இல்லை” என்று.
புலிகளே தமிழ் மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகள் என்று கூறியவர் இந்த சம்பந்தன் அய்யா. அதுமட்டுமன்றி புலிகள் உருவாக்கிய தமிழ்தேசிய கூட்டமைப்பு மூலம் பதவிகளைப் பெற்றவரும் இதே சம்பந்தன் அய்யாதான்.
தமிழ்தேசிய கூட்டமைப்பை புலிகள்தான் உருவாக்கினார்கள் என்பது தனக்கு தெரியாது என்று சம்பந்தர் அய்யா கடந்த வருடம் கூறினார். இப்போது யுத்தத்திற்கு பின்பே அதாவது 2009 க்கு பின்பே தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவானதாக பொய் கூறுகிறார்.
இப்படி வயதான காலத்தில் அறளை பெயர்ந்து அலட்டுவதை விட, கௌரவமாக அரசியலில் இருந்து ஒதுங்குவதே சம்பந்தர் அய்யாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனத்திற்கும்கூட நல்லது.

No comments:

Post a Comment