Sunday, November 20, 2016

•ஏன்டா ! உங்களுக்கு எங்களைப் பார்த்தா கேணைப் பயல்களாக தெரிகிறதா?

•ஏன்டா !
உங்களுக்கு எங்களைப் பார்த்தா கேணைப் பயல்களாக தெரிகிறதா?
வரவுசெலவுத் திட்டத்தில் அபிவிருத்தி தெரிகிறது என்று எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யா புகழாரம் சூட்டியுள்ளார்.
ஆனால் இது தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பட்ஜட் என்று அவரது வாரிசு சுமந்திரன் கூறியுள்ளார்ர்.
எதிர்க்கட்சி தலைவராக இருந்துகொண்டு மக்கள் விரோத பட்ஜட்டை புகழும் கேவலம் ஒருபுறம் இருக்க, அவரது கட்சியைச் சேர்ந்தவரே இது தமிழ் மக்களுக்கு எதிரான பட்ஜட் என்று கூறும் நிலையை இதுவரை இலங்கை வரலாற்றில் கண்டதில்லை.
மக்கள் மீது வரிக்கு மேல் வரியை இந்த அரசு சுமத்துகிறது. சாதாரண மக்களால் தாங்கமுடியாத சுமை சுமத்தப்பட்டுள்ளது.
இதனை எடுத்துக்கூறி கண்டிக்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யாவுக்கு எதிர்கால அபிவிருத்தி தெரிகிறதாம்.
இத்தனை நாளும் இந்தாளுக்கு காதுதான் செவிடு என்று பார்த்தால் இப்பதான் தெரிகிறது இந்தாளுக்கு கண்ணும் குருடு என்று.
இப்படி ஆளும் கட்சிக்கு காவடி தூக்குவதென்றால் எதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி? பேசாமல் ஒரு மந்திரிப் பதவியைப் பெற்றுக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டியதுதானே.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்திக்கு பணம் ஒதுக்கப்படவில்லை. ஆனால் சம்பந்தர் அய்யாவின் குருட்டுக் கண்ணுக்கு அபிவிருத்தி தெரிகிறதாம்.
என்னே கொடுமை இது? எப்படியெல்லாம் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார்கள். இவர்களுக்கு கொஞ்சம்கூட மக்கள் மீது பயம் இல்லையா?
இவர்களுக்கு தமிழ் மக்களைப் பார்த்தா கேணைப் பயல்களாக தெரிகிறதா?
குறிப்பு- எவன்டா அது இந்தாளுக்கு “வாழ்நாள் வீரர்” விருது கனடாவில் கொடுத்தது? அவனுக்கு முதல்ல உதைக்கனும்.

No comments:

Post a Comment