Wednesday, November 30, 2016

•போலி என்கவுண்டர் கொலைகளை வன்மையாக கண்டிப்போம் !

•போலி என்கவுண்டர் கொலைகளை வன்மையாக கண்டிப்போம் !
கேரள பொலிஸ் மாவோயிஸ்ட்டுகள் என்னும் பேரில் 3 பேரை நேற்றைய தினம் சுட்டுக்கொன்றுள்ளது.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் இருவர் தமிழ் நாட்டைச் சேர்ந்த தோழர்கள் குப்புராஜ் மற்றும் அஜீதா என அறிய வந்துள்ளது. மூன்றாவது நபர் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று பொலிஸ் கூறுகிறது.
கடந்தமாதம் ஆந்திராவில் 28 பேர் மாவோயிஸ்டுகள் என்று குறிப்பிட்டு போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
அதன்பின்பு சிறைவைக்கப்ட்டிருந்த 7 முஸ்லிம்கள் மத்திய பிரதேசத்தில் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மோடி ஆட்சிக்கு வந்த பின்பு போலி மோதல் கொலைகள் அதிகரித்துள்ளன. அரசே பொலிஸ் மூலம் தண்டனை வழங்குகிறது. அப்புறம் நீதிமன்றம் , சட்டம் எல்லாம் எதற்கு?
மாவோயிஸ்டுகள் என்பதற்காக கைது செய்ய முடியாது என்று கடந்த மாதம்தான் கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இன்று அதே கேரள பொலிஸ் மாவோயிஸ்டு என்பதற்காக 3 பேரை சுட்டுக் கொன்றதாக கூறுகிறது. கேரள பொலிசே கேரள உயர்நீதிமன்றத்தை மதிக்காவிடில் என்ன அர்த்தம்?
சுட்டுக் கொல்லப்பட்ட பெண் ஒரு வழக்கறிஞர். அவர் மீது எந்த வழக்கோ அல்லது குற்றச்சாட்டோ இல்லை. அப்புறம் எதற்காக அவரை சுட்டுக் கொன்றனர்?
கொல்லப்பட்ட 3வது நபர் யார் என்றே இன்னும் அடையாளம் காணப்படவில்லையாம். அப்புறம் அவரை ஏன் சுட்டுக் கொன்றனர்? அவர் கொடிய பயங்கரவாதி என்று எப்படி கூறுகின்றனர்?
நேற்று ஆந்திராவில். இன்று கேரளாவில் நாளை தமிழ்நாட்டில் உங்களில் யாராவது ஒருவர் இவ்வாறு கொல்லப்படலாம்.
எனவே இந்த போலி மோதல் கொலைகளுக்கு முடிவுகட்ட அனைவரும் ஒருமித்து குரல் கொடுப்போம்.

No comments:

Post a Comment