Wednesday, November 30, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 40 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 40 நாட்கள் மட்டுமே!
இந்த வருட இறுதிக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தருவேன் என்று சம்பந்தர் அய்யா வாக்குறுதியளித்திருந்தார்.
அதன்படி தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்க இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை நினைவூட்டுகின்றோம்.
இன்று சர்வதேச குழந்தைகள் தினமாம்.
எமது தேசத்தில் வறுமையின் கொடுமையால் குழந்தைகளை பெற்றவர்களே கிணற்றில் வீசிக் கொல்லும் அவலம் ஒருபுறம்.
குழந்தைகள் வறுமையின் கொடுமையால் திருடுவதாக குற்றம்சாட்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவலம் இன்னொரு புறம்.
இதற்கு எல்லாம் என்ன தீர்வு? இதனை எமது தலைவர்கள் கண்டு கொள்ளமாட்டார்களா என்று கேட்கவும் முடியவில்லை.
ஏனெனில் இன்னும் 40 நாட்களில் தீர்வு வந்துவிடுமாம். அதன்பிறகு எமது தேசத்தில் பாலும் தேனாறும் ஓடுமாம்.
அதுசரி, குழந்தைப் போராளிகளை புலிகள் வைத்திருப்பதாக ரொம்ப அக்கறையோடு (?) ஒரு குறூப் சொல்லிக்கொண்டு திரிந்ததே. அந்த குறூப் எல்லாம் இப்ப எங்கே போய்விட்டார்கள்?
வன்னியில் வறுமையின் கொடுமையால்; குழந்தைகள் சாவது அவர்களின் கண்ணுக்கு இப்போது ஏன் தெரிவதில்லை?

No comments:

Post a Comment