Wednesday, November 30, 2016

•தமக்காக மாண்டவருக்காக தமிழ் மக்கள் நினைவு கூருவதும் ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது!

•தமக்காக மாண்டவருக்காக தமிழ் மக்கள் நினைவு கூருவதும்
ஒரு போராட்ட வடிவமாகவே வரலாறு பதிவு செய்யப் போகிறது!
மாவீரர்களை நினைவு கூர முடியாது என்றார்கள்
அவர்களை பயங்கரவாதிகள் என்றார்கள்
வன்முறையாளர்களை ஆதரிக்க முடியாது என்றார்கள்
எத்தனையோ தடைகளைப் போட்டுப்; பார்த்தார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் அத்தனை தடைகளையும் தாண்டினார்கள்
ஏனெனில் மாண்டவர்கள் அவர்களது உறவுகள் அல்லவா!
தமிழ் மக்கள்,
முதலில் உரிமைகளை இழந்தார்கள்.
பின்பு உடமைகளை இழந்தார்கள்.
இறுதியில் உயிர்களையும் இழந்தார்கள்.
ஆனால் அவர்கள் உணர்வுகளை இழக்கவில்லை.
எனவேதான் எழுக தமிழாக திரண்டார்கள்.
ஆயிரமாக திரண்டு மாவீரர்களையும் நினைவு கூர்கிறார்கள்.
மாண்டவர்களை வெறுமனனே நினைவு கூர்வதாயின்
வீட்டில் ஒரு மூலையில் அழுதுவிட்டுப் போயிருப்பார்கள்.
எதற்காக இத்தனை செலவு செய்து ஒன்று கூடுகிறார்கள்?
ஏன் ஒருமித்து ஒன்று சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்?
புலத்தில் இருப்பவர்கள் தமது வியாபாரத்திற்காக
மாவீரர் கொண்டாடுவதாக தூற்றினார்கள்.
தமிழ்நாட்டில் அஞ்சலி செய்பவர்கள்
புலிகளின் காசுக்காய் கூவுவதாய் புலம்பினார்கள்.
போராடியவர் தாயகத்தில் வறுமையில் வாட
புலத்தில் ஆடம்பர மாவீரர் விழா தேவைதானா எனவும்
அவர்கள் கேள்விகள் கேட்டார்கள்.
ஆனால் அத்தனை கேள்விகளுக்கும்
தமிழ் மக்கள் பதில் அளித்துள்ளனர்.
மாவீரர் நினைவு என்பது வெறும் அஞ்சலி மட்டுமல்ல
அது அரசுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் இன்னொரு வடிவம்என்று உணர்வு பூர்வமாய் காட்டுகின்றார்கள்.
அதனால்தான்,
புதர்பற்றிய மாவீரர் இல்லங்களை
கூட்டிச் சுத்தம் செய்கின்றனர்.
உடைந்துபோன கற்குவியலில்
மாவீரர்களை தேடுகின்றனர்.
புலத்தில் மட்டுமா தமிழன் அஞ்சலி செலுத்துகிறான்
இம்முறை தாயக மண்ணிலும் அல்லவா அஞ்சலி நடைபெற்றது.
அதுமட்டுமா? தமிழகத்தில்கூட பல நிகழ்வுகள் நடக்கின்றனவே
ஒன்றுகூட முடியாதவர்கள் முகநூல்களில் அஞ்சலி செய்கின்றனர்.
அஞ்சலிப் பதிவுகளால் முகநூல் என்றுமில்லாதவாறு நிரம்பி வழிகிறது.
இவை எல்லாம் எதைக் காட்டுகின்றன?
எத்தனை அடக்குமுறை செய்தாலும்
எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும்
தமிழ் மக்கள் தமது உணர்வுகளை ஒருபோதும் இழக்கமாட்டாகள் என்பதையன்றி வேறு என்னவாக இருந்தவிட முடியும்?

No comments:

Post a Comment