Sunday, November 20, 2016

•தீர்வு கிடைக்க இன்னும் 46 நாட்கள் மட்டுமே!

•தீர்வு கிடைக்க இன்னும் 46 நாட்கள் மட்டுமே!
இந்த வருட இறுதிக்கள் தீர்வு பெற்று தருவேன் என்று சம்பந்தர் அய்யா தமிழ் மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தார்.
அதன்படி இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 46 நாட்களே உள்ளது. வாக்குறுதியளித்தபடி சம்பந்தர் அய்யா தீர்வு பெற்று தருவாரா?
அமெரிக்க புதிய ஜனாதிபதி டிரம்புடன் சேர்ந்து இயங்கி தீர்வைப் பெறுவோம் என சம்பந்தர் அய்யா கூறியுள்ளார்.
எனவே, தீர்வு பெறுவதற்கு ஹிலாரி அம்மையாரின் தோல்வி காரணமாக அமைந்துவிட்டது என்று இனி சம்பந்தர் அய்யா சொல்லமாட்டார் என நம்பலாம்.
அவரது வாரிசுகள் சிலர் சொல்வதுபோல் எழுக தமிழ் பேரணி தீர்வைக் குழப்பிப்போட்டது என்றும் சம்பந்தர் அய்யா சொல்லமாட்டார் என நம்பலாம்.
சுமந்திரனைத் தவிர 225 எம்பிகளில் வேறுயாரும் தீர்வு வரும் என நம்பவில்லை என ஒரு ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் கூறினாராம்.
அப்படியென்றால் 47வது நாள், தீர்வு வராமைக்கு என்ன காரணத்தை தமிழ் மக்களுக்கு சம்பந்தர் அய்யா கூறப்போகிறார்?
எதுவாயினும் தீர்வு பெற்றுத்தரவில்லை என்றால் சம்பந்தர் அய்யா தார்மீக ரீதியில் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
மக்களை ஏமாற்ற சம்பந்தர் அய்யா முயல்வாரேயானால் அதற்குரிய தண்டனையை மக்களிடமிருந்து அவர் பெறுவார்.

No comments:

Post a Comment