Wednesday, November 30, 2016

•கவிதை குறித்த உரையும் சமூக அரசியல் கலந்துரையாடலும்!

•கவிதை குறித்த உரையும்
சமூக அரசியல் கலந்துரையாடலும்!
லண்டன் ஈஸ்ட்காம் நகரில் நேற்று (26.11.16) மாலை 5.30 மணியளவில் கவிதை குறித்து உரையும் சமூக அரசியல் கலந்துரையாடலும் நடைபெற்றது.
தமிழ்மொழி சமூகங்களின் செயற்பாட்டகம் சார்பில் இரு அமர்வுகளாக இவ் நிகழ்வுகள் ஈஸ்ட்காம் தமிழ் சங்க மண்டபத்தில் நடைபெற்றன.
முதலாம் அமர்வில் புஸ்பராஜன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.
முதலில் முரளி சண்முகவேலன் அவர்கள் அமெரிக்க தேர்தலில் டொனால்ட் ரம்ப் இன் வெற்றி குறித்து தனது பார்வையை முன்வைத்தார்.
அதையடுத்து தோழர் வேலு அவர்கள் துயர் நடுவே வாழ்வு என்னும் திகார் பெண்களின் கண்ணீர் கவிதைகள் பற்றி உரையாற்றினார்.
அடுத்து சந்தூஸ் பரராசசிங்கம் அவர்கள் குவண்டனமோ கவிதைகள் (கைதிகளின் குரல்) பற்றி உரையாற்றினார்.
சிறிது நேர தேனீர் இடைவேளைக்கு பின்பு இரண்டாவது அமர்வு ஆரம்பமானது.
இரண்டாவது அமர்வு பௌசர் தலைமையில் நடைபெற்றது.
அதில் பேராசிரியர் ரட்ண ஜீவன் கூல் அவர்கள் போருக்கு பின் வடக்கு கிழக்கில் கல்வி மற்றும் சமூக நிலை குறித்து உரையாற்றினார்.
இறுதியில் பார்வையாளர்களின் கருத்து பரிமாற்றங்களுடன் 9.30 மணியளவில் நிகழ்வு முடிவுற்றது.

No comments:

Post a Comment