Sunday, November 20, 2016

•புதையல் எடுக்க தன் மனைவி பிள்ளைகளை கொலை செய்த மனிதன்!

•புதையல் எடுக்க தன் மனைவி பிள்ளைகளை கொலை செய்த மனிதன்!
இந்த முட்டாள்தனத்திற்கு முடிவு கட்டுவது யார்? எப்போது? எப்படி?
திருகோணமலை – கிளிக்குஞ்சு மலை பகுதியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் வெட்டி கொலை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியா காட்டுப்பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்படும் புதையல் பெற்றுக்கொள்ள தமது இரு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என அந்த நபர் மனைவியிடம் கேட்டுள்ளார்.
ஆனால் மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து மூவரையும் வெட்டிக் கொலை செய்ததாக அந்த நபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
எவ்வளவு கேவலமான வெட்கப்படும்படியான முட்டாள்தனமான செயல் இது. இதற்கு அந்த நபரின் முட்டாள்தனம் மட்டும் காரணம் இல்லை. எமது தமிழ் சமூகம் கட்டிக்காக்கும் மூட நம்பிக்கைகளும் காரணமாகும்.
மூட நம்பிக்கையின் அசிங்கமான செயல்தான் இந்த முக்கொலையின் வெளிப்பாடு. சமூகத்தில் இருந்து இவ்வாறான மூட நம்பிக்கைகளை விதைக்கும் மதிந்திரவாதிகள் போன்றோர் அப்புறப்படுத்த வேண்டும்.
இது தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல சிங்கள சமூகத்திலும் காணப்படுகிறது. ஒரு ராணுவ தளபதி புதையல் எடுப்பதற்காக சிறுவன் ஒருவனை பலி கொடுத்த செய்தி கடந்த வருடம் வந்தது. ஆனால் தளபதியின் செல்வாக்கால் அந்த செய்தி அமுக்கப்பட்டுவிட்டது.
உலகில் ஒருபுறம் விஞ்ஞானம் வளர்ந்து செவ்வாயில் மனிதன் வாழ முடியுமா என ஆய்வு செய்கிறது. ஆனால் மறுபுறத்தில் எமது தமிழ் சமூகம் புதையல் எடுக்க தம் பிள்ளைகளையே பலி கொடுக்கிறது.
இந்த முட்டாள்தனத்திற்கு முடிவு கட்டுவது யார்? எப்போது? எப்படி?
மக்கள் மத்தியில் இந்த அறியாமை இருப்பதற்கு முக்கிய காரணம் மதமே. எனவே மக்கள் பகுத்தறிவைபெறுவதற்கு முதலில் மதத்தை ஒழிக்க வேண்டும்.
மக்கள் அறிவு பெறக்கூடாது என்பதற்காகவே, மக்கள் தொடர்ந்தும் முட்டாள்களாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே அரசும் மதத்தைக் கட்டிக் காப்பாற்றுகின்றது.
இதற்காகவே இந்துமதத்தில்; சிவசேனாக்கள் உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் பகுத்தறிவை வளர்க்க ஒரு தந்தை பெரியார் அவசியம் தேவைப்படுகிறார்.

No comments:

Post a Comment