Wednesday, November 30, 2016

•சீமான் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் !

•சீமான் மீது ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள் !
வேண்டாத மாமி கைபட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம் என்பதுபோல் சிலர் தமக்கு பிடிக்காத சீமான் மீது விசிலடித்தார் என்று விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
சீமான் மீது எத்தனையோ ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைக்க முடியும். அதைவிடுத்து அவர் விசிலடித்தார் என்று வைக்கும் விமர்சனங்களால் என்ன பயனை பெற்றுவிட முடியும்?
“அவர்கள் கப்பலில் வந்தார்கள். தங்கள் கையில் இருந்த பைபிளை எம்மிடம் தந்தார்கள். எங்கள் கையில் இருந்த நாட்டை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்”. இது ஒரு ஆப்பிரிக்க நாட்டு கவிஞனின் கவிதை வரிகள்.
ஆனால் எதையுமே தராமலே இந்திய அரசு இலங்கை நாடு முழுவதையுமே ஆக்கிரமித்துவிட்டதே. இதை எழுத எந்த கவிஞனும் எமிமிடம் இல்லையே
இந்தியாவுக்கு,
•சம்பூர் கொடுத்தாயிற்று
•புல்மோட்டை கொடுத்தாயிற்று
•மன்னார் எண்ணெய்வயல் கொடுத்தாயிற்று
•பலாலி விமான நிலையம் கொடுத்தாயிற்று
•காங்கேசன் துறைமுகமும் சீமெந்தும் கொடுத்தாயிற்று
•திருகோணமலை துறைமுக குதங்கள் கொடுத்தாயிற்று
மிஞ்சி இருப்பது கோமணம் மட்டுமே அதையும் எப்போது உருவிக் கொடுக்கப்போறாங்களோ தெரியவில்லையே?
ஒரு பக்கம் இலங்கை அரசு ஒடுக்கிறது. மறுபக்கம் இந்திய அரசு ஆக்கிரமிக்கிறது தமிழன் எப்படி நீட்டி நிமிர்ந்து உறங்குவது?
இந்த அவலத்தை சீமானுக்கு எடுத்துக் கூறுங்கள். அவரது போராட்டம் இந்திய ஆக்கிரமிப்பு எதிராக அமையட்டும்.

No comments:

Post a Comment