Wednesday, November 30, 2016

•இளநீர் குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவர்களை பிடிக்கிறார்கள்!

•இளநீர் குடித்தவன் இருக்க
கோம்பை நக்கியவர்களை பிடிக்கிறார்கள்!
செய்தி- முன்னாள் அமைச்சர் கருணா கைது
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கருணா கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
கருணா மீது பல கொலைக் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவற்றுக்காக அவர் கைது செய்யப்படவில்லை.
ரவிராஜ் கொலையில் அவருக்கு பங்கு உண்டு என்று விசாரணையில் தெரிய வந்த பின்பும்கூட அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை.
பல ஆள் கடத்தல் மற்றும் சட்ட விரோத செயல்களில் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால் அவற்றுக்காக கருணா கைது செய்யப்படவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் குறிப்பாக பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொலை கருணாவின் உத்தரவிலேயே நடந்தது என்று குற்றச்சாட்டு உண்டு. அதற்காகவும்கூட கருணா கைது செய்யப்படவில்லை.
வெறும் நிதி மோசடிக்காக கருணா கைது செய்யப்பட்டிருப்பது என்பது இந்த அரசு நடவடிக்கை எடுப்பதாக காட்டுவதற்கேயொழிய கருணாவை தண்டிப்பதற்காக அல்ல.
நிதிமோசடிக்காக கருணா கைது செய்யப்பட்டிருப்பது உண்மை என்றால் அவரைவிட பன்மடங்கு நிதி மோசடி செய்த மகிந்த ராஜபக்ச ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை?
மகிந்தவைக் கைது செய்யாமல் கருணாவை கைது செய்தமை இளநீர் குடித்தவன் இருக்க கோம்பை நக்கியவனை பிடித்த கதையன்றி வேறு என்ன?
இந்த ஆட்சியில் பசில் ராஜபக்ச , நாமல் ராஜபக்ச, விமல் வீரவம்ச ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் உடனேயே பினையில் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். ஆனால் பிள்ளையானுக்கு இன்னும் பிணை வழங்காமல் இருப்பது ஏன்?
தான் ஆட்சிக்கு வந்தால் கே.பி யை விசாரித்து அவர் வசம் இருக்கும் பல கோடி ரூபாக்களை கைப்பற்றுவேன் என்று ரணில் கூறியிருந்தார்.
ஆனால் இதுவரை கே. பி மீது எந்த விசாரணையும் செய்யவில்லையே. அவர் மகிந்த ஆட்சியில் திரிந்தது போல் சுதந்திரமாகவும் சொகுசாகவும் திரிகிறாரே. அது ஏன்?
ஒருவேளை வழக்கம்போல் அவருடனும் இரகசியமாக “ டீல்” பேசி முடித்து விட்டார்களா என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.
விமல் வீரவம்ச வீட்டிற்குள்ளேயே ஒரு இளைஞன் கொலை செய்யப்பட்டிருக்கிறான். ஆனால் இன்னும் வீரவம்ச கைது செய்யப்படவில்லை. விசாரணைகூட செய்யப்படவில்லை. அது ஏன்?
ரணிலுக்கும் மகிந்தவுக்கும் இடையில் எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று இருக்கிறது என்றும் அதனால்தான் மகிந்த கும்பல் மீது உண்மையான , கடுமையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது.
அந்த சந்தேகம் உண்மைதான் என்பதை நிரூபிப்பது போன்று இளநீர் குடித்தவர்களை விட்டு கோம்பை நக்கியவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment