Wednesday, November 30, 2016

•கண் உள்ளவர் பாருங்கள் காது உள்ளவர் கேளுங்கள் மனட்சாட்சி உள்ளவர் புரிந்து கொள்ளுங்கள்

•கண் உள்ளவர் பாருங்கள்
காது உள்ளவர் கேளுங்கள்
மனட்சாட்சி உள்ளவர் புரிந்து கொள்ளுங்கள்
ஒரு தாய்க்கு தன் மகன் இறந்த துயரத்தை விட ,அவன் புதைத்த இடத்தை கண்டறிய “அம்மா என்று ஒருமுறை கூப்பிடு” என்று கேட்கும் அவலம் இருக்கிறதே அதைவிட கொடிய வலி என்னவாக இருக்கும் இந்த பூமியில்?
இதயம் உள்ளவர்கள் ஒருமுறை கேளுங்கள் இந்த தாயின் குமுறலை.
என்ர அய்யா ! என்ர செல்லமே!
நான் பெத்த செல்லக் குட்டியே!
என்ர தெய்வமே! தெய்வமே!
இப்படிக் குடுத்து வச்சனியே!
உன்ர இடத்தைக் காட்டு அம்மாவுக்கு!
இப்படி காடு பத்தினால் நான் எங்கே அய்யா உன்னை தேடிப் பிடிப்பது?
என்ர செல்லமே!
அம்மா ன்னு கூப்பிடு ஒருக்கால்
அம்மா ஓடி வாரன் கூப்பிடு அய்யா!
என்ர அய்யா! என்ர அய்யா !
வருசா வருசம் வீட்டில் இருந்து கத்தினேனே அய்யா
இந்த வருசம் இதையென்றாலும் எனக்கு காட்டு அய்யா
கூப்பிடு அய்யா! ஒரு முறை அம்மா ன்னு கூப்பிடு அய்யா!
கொதிக்குது அய்யா ! வயிறு கொதிக்குது அய்யா!
பி.கு- இந்த தாயின் குமுறலே ஈழத் தமிழர்களின் தேசியகீதம்!

No comments:

Post a Comment