Wednesday, November 30, 2016

•விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை- பிடல் காஸ்ட்ரோ

•விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை- பிடல் காஸ்ட்ரோ
அமெரிக்க இரட்டைக்கோபுரம் குண்டுத் தாக்குதலில் அழிக்கப்பட்தையடுத்து பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரை அமெரிக்கா பிரகடனம் செய்தபோது ஹவானாவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய காஸ்ட்ரோ " அமெரிக்காவும மேற்குலக வல்லாதிக்க நாடுகளும் சேர்ந்து உலக வரை படத்தில் இருந்து அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் இடையிலான முக்கியமான வேறுபாட்டை அழித்துவிடப் போகின்றன" என்று சொன்னார்.
ஆம். இது உண்மைதான் என்பதை நாம் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் கண்டோம். இந்தியாவில் மாவோயிஸ்ட் அழிப்புகளில் கண்டு வருகின்றோம்.
ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ரோ. இன்று அவர் மறைவை அடுத்து இந்தியா தனது உற்ற நண்பனை இழந்துவிட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆனால் இதே மோடிதான் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் மாவோயிஸ்டுகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி போலி மோதல்கள் மூலம் சுட்டுக் கொன்று வருகின்றார்.
மறைந்த பிடல் காஸ்ரோ அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி வருகின்றனர் இந்திய மாக்ஸ்சிட் கம்யுனிட் கட்சியினர். ஆனால் இதே மாக்ஸ்சிஸ்ட் கட்சியினர் ஆட்சி செய்யும் கேரள அரசுதான் இரண்டு தினங்களுக்கு முன்னர் 3 பேரை மாவோயிஸ்டுகள் என்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
சுட்டுக் கொல்லப்ட்டவர்களில் ஒருவர் பெண் வழக்கறிஞர். அவர் மீது எந்த வழக்கோ குற்றச்சாட்டுகளோ இல்லை. ஆனால் அவரையும் கேரள கம்யுனிஸ்ட் அரசு சுட்டுக் கொன்றுள்ளது.
ஒருபுறத்தில் மாவோயிஸ்டுகளை சுட்டுக் கொன்றுவிட்டு மறுபுறத்தில் பிடல் காஸ்ரோவிற்கு வீர வணக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர் இந்த போலிக் கம்யுனிஸ்டுகள்.
இந்த இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் முதலில் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பாராளமன்ற பாதைக்கு சென்று தம்மை திரிபுவாதிகளாக காட்டிக் கொண்டனர்.
தற்போது மாவோயிச போராளிகளை சுட்டுக் கொல்வதன் மூலம் தாமும் இந்திய ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
உலகில் எங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டம் நடைபெறுகிறதோ அங்கு எல்லாம் பிடல் காஸ்ரோ உயர்த்திப் பிடிக்கப்பட்டார்.
அந்தவகையில் இலங்கையிலும் தமிழ் மக்களால் பிடல் காஸ்ரோ மிகவும் மதிக்கப்பட்டார். ஆனால் பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது தமிழ் மக்;களுக்கு விரோதமாக இலங்கை அரசின் இனப்படுகொலையை ஆதரித்தது.
பிடல் காஸ்ரோவின் கியூப அரசானது இலங்கை அரசின் இனப் படுகொலைக்கு வழங்கிய ஆதரவானது தமிழ் மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வலியைவிட அதிகமானது.
இந்த கசப்பான உண்மைகளை மறந்து பிடல் காஸ்ரோவை என்னால் போற்ற முடியவில்லை என்பதை தயவுடன் கூறிக்கொள்கிறேன். என்னை மன்னித்து கொள்ளுங்கள்.
எனக்கு காஸ்ரோவைவிட என் தமிழ் இனம்தான் பெரிது. முக்கியமானது.

No comments:

Post a Comment