Monday, December 31, 2018

நீங்க 300 வருடமாகத்தான் இந்தியா.

நீங்க 300 வருடமாகத்தான் இந்தியா.
ஆனால் நாங்க 3000 வருடமாக தமிழர்கள்!
மார்க்ஸ் எங்கெல்ஸ் இருவருமே லண்டனில் அகதியாக வாழ்ந்தவர்கள்தான்
லெனின் கூட புரட்சிக்கு முன்னர் அகதியாக வாழ்ந்தவர்தான்
ஆனால் மார்க்ஸ் லெனின் ஆகியோரை உயர்த்திப்பிடிக்கும் இந்திய கம்யுனிஸ்ட்டுகளுக்கு ஈழ அகதிகள் மட்டும் ஏன் கேவலமாக தெரிகிறார்கள்?
தீபெத் அகதிகளை வெளியேற்றும்படி கோராத கம்யுனிஸ்ட்டுகள்,
வங்கதேச அகதிகளை வெளியேற்றும்படி கோராத கம்யுனிஸ்டுகள்,
பர்மா அகதிகளை வெளியேற்றும்படி கோராத கம்யுனிஸ்டுகள்,
ஈழ தமிழ் அகதிகளை மட்டும் வெளியேற்றும்படி கோருவது ஏன்?
37 வருடமாக அகதிகளாக இருப்பவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டிய கம்யுனிஸ்டுகள் அவர்களை அடைக்க வேண்டும் என்று கோருவது ஏன்?
லட்சக்கணக்கில் வடநாட்டில் இருந்து வருபவர்களால் தமிழ்நாட்டின் வளங்கள் பறிக்கப்படுவது குறித்து அக்கறை கொள்ளாத கம்யுனிஸ்ட்டுகள் ஈழ அகதிகளால் தமிழக வளம் பறிக்கப்படுவதாக கூறுவது ஏன்?
இது ஏதோ ஒரு கம்யுனிஸ்ட் கட்சி தலைவரின் கருத்து என்றால் அக் கருத்திற்கு இதுவரை எந்த கம்யுனிஸ்ட் கட்சியும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
ஈழ அகதிகளுக்கு ஆதரவாக இதுவரை ஏன் ஒரு கம்யுனிஸ்ட் தலைவரும் அறிக்கைவிட வில்லை?
தமிழ்நாட்டிற்கு மலையாளி வரலாம்,
தமிழ்நாட்டிற்கு தெலுங்கர் வரலாம்
தமிழ்நாட்டுக்கு கன்னடர் வரலாம்
தமிழ்நாட்டிற்கு சேட்டுகள்கூட வரலாம்
ஆனால் தொப்புள்கொடி உறவு ஈழத் தமிழன் வரக்கூடாதா?
கனடாவில் தமிழன் இல்லை. ஆனால் அது 3 லட்சம் ஈழ அகதிகளை சேர்த்து வாழுகின்றது
லண்டனில் தமிழன் இல்லை. அனால் அது ஒரு லட்சம் ஈழ அகதிகளை சேர்த்து வாழுகின்றது.
இந்தியாவில் 7 கோடி தமிழர் வாழுகின்றனர். அதுவும் தமிழ்நாடு தமிழரின் தாயகம். அப்படியிருக்கும்போது ஏன் ஈழ தமிழ் அகதிகளை மட்டும் சேர்க்க முடியாது?
இந்தியாவில் தீபெத் அகதிகள் சுதந்திரமாக திரிகின்றனர்.
இந்தியாவில் பர்மா , வங்கதேச அகதிகளும் சுதந்திரமாக திரிகின்றனர்.
ஆனால் இந்தியாவில் ஈழ அகதிகளை மட்டும் அடைத்து வைக்கும்படி கம்யுனிஸ்ட்டுகள் கோருகின்றனர்.
இந்திய பிரதமர் மாலைதீவுக்கு கொடுத்த பணம் 14000 கோடி ரூபா
இந்திய பிரதமர் பூட்டானுக்கு கொடுத்த பணம் 4500 கோடி ரூபா
ஆனால் தமிழ்நாட்டுக்கு கொடுத்த புயல் நிவாரண நிதி வெறும் 378 கோடி ரூபா மட்டுமே
அதேவேளை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாட்டில் இருந்து வரியாக 85000கோடி ரூபாவை இந்திய அரசு பெற்றுக்கொள்கிறது.
தமிழ்நாட்டிற்கு ஏன் இந்த வஞ்சனை என்று ஒரு கம்யுனிஸ்ட் தலைவராவது கேட்டிருக்கிறாரா?
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழ் அகதியை வெளியேற்ற வேண்டும் என்று கூறும் தைரியம் எப்படி இவர்களுக்கு வந்தது?
ஏன் இந்த அவலம் தமிழனுக்கு வந்தது?
ஏனென்றால் தமிழன் அடிமையாக இருப்பதே இதற்கு காரணம்.
தோழர் தமிழரசன் கூறியது போல் தமிழ்நாடு விடுதலை பெற்றிருந்தால்; தமிழனுக்கு இந்த நிலை வந்திருக்குமா?
சிந்தியுங்கள் தமிழர்களே!

No comments:

Post a Comment