Monday, December 31, 2018

• இவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது ஏன்?

• இவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது ஏன்?
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்கிறார்கள். அப்படியென்றால் சுமார் 5 வருடமாக இவர்களுக்கு நீதி வழங்காமல் தாமதிப்பது நீதி மறுக்கப்படுவதாகத்தானே அர்த்தம்.
இவர்கள் 1830 நாட்களாக மதுரை சிறையில் அடைக்கப்பட்டு நீதி மறுக்கப்படுவது குறித்து தமிழக அரசு என்ன பதில் கூறப்போகிறது?
கடந்த 10.03.2014 யன்று கைது செய்யப்பட்ட திருச்செல்வம், கவிஅரசு, காளை, ஜோன்மாட்டின், காhத்திக் ஆகிய ஜந்து தமிழ் இன உணர்வாளர்களும் 1830 நாட்களாக மதுரை சிறையில் வாடுகின்றனர்.
இவர்கள் மீது போடப்பட்ட வழக்கில் வழங்கப்படக்கூடிய தண்டனையைவிட அதிக காலத்தை சிறையில் கழித்து விட்டார்கள்.
இருப்பினும் அவர்களுக்குரிய நீதி இன்னும் வழங்கப்படாமல் வேண்டுமென்றே தாமதம் செய்யப்படுகிறது.
பொலிஸ் , அரசு, நீதிமன்றம் மூன்றும் சேர்ந்து வேண்டுமென்றே நீதி வழங்காமல் தாமதம் செய்கின்றன. ஜாமீனில் விடுதலை செய்யவும் மறுக்கின்றன.
இவர்களுக்குரிய நீதி ஏன் மறுக்கப்படுகிறது?
இவர்களுக்கு நீதி மறுக்கப்படுவது குறித்து ஊடகங்கள் மட்டுமல்ல மனிதவுரிமை அமைப்புகள்கூட மௌனம் காக்கின்றன.
இந்தியா ஜனநாயகநாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் இந்த தமிழ் இன உணர்வாளர்களுக்கு நீதியை மறுக்கிறார்கள்.
60 கோடி ரூபா மக்கள் பணத்தை ஊழல் செய்து 4 வருட தண்டனை பெற்ற ஜெயா அம்மையார் கும்பலுக்கு 21நாட்களில் பிணை வழங்கி வரலாற்று சாதனை படைத்தது உச்சநீதிமன்றம்.
ஆனால் இந்த ஜந்து பேருக்கும் ஜந்து வருடமாகியும்; பிணை வழங்க நீதிமன்றம் மறுக்கிறது. இது என்ன நியாயம்?
இவர்கள் செய்த குற்றம் என்ன?
இவர்கள் ஜெயா அம்மையார் போல் மக்கள் பணத்தை ஊழல் செய்தவர்களா?
இவர்கள் கனிமொழி போல் 2ஜி ஊழல் மூலம் பணம் சேர்த்தவர்களா?
இவர்கள் காஞ்சி சங்கராச்சாரி போல் ஆள் வைத்து கொலை செய்தவர்களா?
இவர்கள் அழகிரி போல் காலையில் வாக்கிங் போனவரை கொலை செய்தவர்களா?
கொலை செய்தவன், கொள்ளையடித்தவன், ஊழல் செய்தவன் எல்லாம் வெளியில் இருக்கிறான்.
ஆனால் இந்த ஜந்து பேர் மட்டும் எதற்காக சிறையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்?
இவர்கள் தமது தமிழ் இனம் அடிமைபட்டுக் கிடப்பதாக நினைத்தது தவறா?
இவர்கள் தமது தமிழ் இன விடுதலைக்காக செயற்பட முனைந்தது தவறா?
இவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக சிந்தித்தது தவறா?
இவர்கள் தோழர் தமிழரசன் பாதையில் தமிழ்நாடுவிடுதலைக்காக போராடியது தவறா?
இவர்களும் மற்றவர்கள் போல் தாம் உண்டு. தம் வேலை உண்டு என்று இருந்திருக்கலாம்.
அவ்வாறு இருந்திருந்தால் இவர்கள் மட்டுமல்ல இவர்களுடைய உறவினர்களும் எவ்வித பொலிஸ் பிரச்சனையும் இன்றி நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம்.
ஆனால் இவர்கள் தமது பெறுமதிமிக்க இளமைக்கால வாழ்க்கையையே தமிழ் இனத்திற்காக அர்ப்பணித்துள்ளார்கள்.
நீதி மறுக்கப்ட்ட இந்த ஜந்து உணர்வாளர்களும் விடுதலை பெற இனியாவது குரல் கொடுப்போம்!

No comments:

Post a Comment