Thursday, December 27, 2018

இந்திய அதிசயம்!

இந்திய அதிசயம்!
விவசாயிகள் போராடுகிறார்கள். அவர்களை சந்திக்க இந்திய பிரதமருக்கு நேரம் இல்லையாம்.
காஜா புயலால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதனை பார்வையிட இந்த பிரதமருக்கு நேரம் இல்லையாம்.
ஆனால் அரை நிர்வாண நடிகையின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்த நேரம் இருக்கிறதாம் அந்த பிரதமருக்கு.
பட்டேல் சிலைக்கு மூவாயிரம் கோடி ரூபாயை கொடுத்த இந்திய பிரதமர் தமிழக மக்களுக்கு கொடுத்த புயல் நிவாரண நிதி வெறும் முந்நூறு கோடி ரூபாய் மட்டுமே.
இத்தகைய அதிசய பிரதமர் உலகில் இந்தியாவில் மட்டுமே இருக்க முடியும்.
அதுமட்டுமல்ல வருடம் ஒன்றுக்கு 85000கோடி ரூபாயை வரியாக இந்திய அரசுக்கு கொடுத்துவிட்டு புயல் நிவாரணத்திற்கு 300 கோடி ரூபாவிற்கு கையேந்தி நிற்கும் மக்கள் உலகில் தமிழ் மக்கள் மட்டுமே!

No comments:

Post a Comment